244
தமிழ்ப் பழமொழிகள்
பூசணிக்காய்ப் பருமன் முத்து; அதைக் காதில் தொங்கவிடலாமா? மூக்கில் தொங்க விடலாமா?
பூசணிக்காய் போகிற இடம் தெரியாது; கடுகு போகிறதை ஆராய்வார்.
பூசப் பழையது பூனைக்கும் ஆகாது.
பூசப் பூசப் பொன் நிறம்; தின்னத் தின்னத் தன்னிறம். 16860
- (திருநீறு.)
பூசாரி ஆலய மணியை அடித்தால் ஆனை தெரு மணியைத் தானே அடிக்கும்?
பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை.
பூசாரி புளுகும் புலவன் புளுகும் ஆசாரி புளுகில் அரைப் புளுக்குக்கு ஆகாது.
பூசாரி பூ முடிக்கப் போனானாம்; பூவாலங்காடு பலாக்காடாய்ப் போச்சுதாம்.
பூசாரி பெண்டாட்டியைப் பேய் பிடித்த கதை. 16865
பூசுவது தஞ்சாவூர் மஞ்சளாம்; அதைக் கழுவுவது பாலாற்றுக் கரைத் தண்ணீராம்.
பூசை வளர்ந்தது போச்சு.
- (பூசை-பூனை.)
பூசை வேளையில் கரடி விட்டு ஒட்டியது போல்.
- (பூசை பண்ணுகிற போது. பூசை முகத்திலே, கெருடி.)
பூட்டிக் சுழற்றினால் பறைச்சி; பூட்டாமலே இருந்தால் துரைச்சி.
பூட்டிப் புசிக்காமல் புதைப்பார்; ஈயைப் போல் ஈட்டி இழப்பார். 16870
பூட்டும் திறப்பும் போல.
- (திறப்பு-சாவி.)
பூண்டிப் பொத்தறை, ஏண்டி கத்தறாய்?
- (பொத்தறை; வட ஆர்க்காட்டு மாவட்டத்தில் உள்ள ஊர்.)
பூண்டியில் விளையாடும் புலிக்குட்டிப் பசங்கள்.
பூணத் தெரிந்தால் போதுமா? பேணத் தெரிய வேண்டாமா?
பூணாதார் பூண்டால் பூஷணமும் விழுந்து அழும். 16875
பூத்தது என்றால் காய்த்தது என்பது போல.
பூத்தானம் ஆன பிள்ளை ஆத்தாளைத் தாலி கட்டிற்றாம்.
- (கட்டினது போல.)
பூத்தானம் ஆன பிள்ளை பிறந்து பூவால் அடிபட்டுச் செத்தது.
- (பூத்தானம்.)
பூத்துச் சொரியப் பொறுப்பார்கள்; முட்டிக் கட்டக் கலங்குவார்கள்.
பூத உடம்பு போனால் புகழ் உடம்பு. 16880