பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தமிழ்ப் பழமொழிகள்


சொல் பேச்சையும் கேளான்; சுய புத்தியும் இல்லை.

சொறி சொறிகிற சுவாரசியத்தில் ஆனை விலைகேட்ட மாதிரி.

சொறிந்து தேய்க்காத எண்ணெயும் எண்ணெய் அல்ல; பரிந்து இடாத சாதமும் சாதம் அல்ல. 11620


சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.

சொறி நாய்க்குக் குட்டையே சொர்க்கம்.

சொறி நாய் சுகம் பெற்றது போல.

சொறி நாய் சோர்ந்து விழும்; வெறி நாய் விழுந்து கடிக்கும்.

சொறி பிடித்த நாயானாலும் வீட்டைக் காக்கும். 11625


சொறியக் கொடுத்த பசுப் போல.

சொறியாந் தவளையும் வேட்டை ஆடுகிறதாம்.

சொன்ன சொல்லுக்கு இரண்டு இல்லாமல் வருவான்.

சொன்னது இருக்கச் சுரை பிடுங்குகிறாய்.

(பிடுங்குகிறான்.)

சொன்னதைச் சொல்லடி, சுரணை கெட்ட மூளி. 11630


சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

சொன்னதை சொல்லுமாம் கிளி; செய்ததைச் செய்யுமாம் குரங்கு.

சொன்னதை விட்டுச் சுரையைப் பிடுங்குகிற மாதிரி.

சொன்னபடி கேட்காவிட்டால் மண்ணை வெட்டி மாப்படைப்பேன்.

சொன்னபடி கேட்டால் மாப்படைப்பேன்; கேளாவிட்டால் மண்ணை வெட்டிப் படைப்பேன். 11635


சொன்னபடியே கேட்பவனுக்குச் சோறும் இல்லை; புடைவையும் இல்லை.

சொன்னபடி கேட்டால் சுட்டவுடன் தருவேன்.

(தருவாள்.)

சொன்னால் ஆய் செத்துப் போவாள்; சொல்லாவிட்டால் அப்பன் செத்துப் போவான்.

சொன்னால் குற்றம்; சொறிந்தால் அரிப்பு.

சொன்னால் துக்கம்; அழுதால் வெட்கம். 11640


சொன்னால் வெட்கக் கேடு; அழுதால் துக்கக் கேடு.

சொன்னால் பெரும்பிழை; சோறு என்றால் பட்டினி.

சொன்னால் போலக் கேட்டால் சுட்டாற் போலக் கொடுப்பேன்

சொன்னாலும உறைப்பதில்லை; சுட்டாலும் உறைப்பதில்லை.

சொன்னாலும் பொல்லாது; சும்மா இருந்தாலும் தோஷம். 11645


சொன்னான் சுரைக்காய்ககு உப்பு இல்லை என்று.

சொன்னேன், சுரைக்காய்ககு உப்பு இல்லை, பாகற்காய்க்குப் பருப்பு இல்லை என்று.