24
தமிழ்ப் பழமொழிகள்
சோழ நீதி பெண்டு விற்றுப் போகிறதா?
சோழபுரத்தானோ? சூது பெருத்தானோ?
சோழ மண்டலமோ? சூது மண்டலமோ?
சோழவரத்துக் குப்பு, சோப்புப் போட்டுக் குப்பு. 11670
- (ருப்பு.)
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
- (சிண்டு.)
சோழியன் குடுமியைச் சுற்றிப் பிடித்தாற் போல.
சோழியன் கெடுத்தான்.
- (தொண்டரடிப் பொடியாழ்வார் திருமலையைப் பாடவில்லை.)
சோளக் கொல்லைப் பொம்மை மாதிரி.
சோளக் கொல்லையில் மாடு மேய்ந்தால் சொக்கனுக்கு என்ன? 11675
சோளப் பயிரை மேய்ந்த மாட்டுக்குச் சொர்க்க லோகம் வேண்டுமா?
சோளி சோளியோடே, சுரைக் குடுக்கை ஆண்டியோடே.
சோளியைப் பிடுங்கிக் கொண்டா பிச்சை போடுகிறது?
சோற்றால் எடுத்த சுவர்.
- (அடித்த.)
சோற்றில் இருக்கிற கல்லை எடுக்க மாட்டாதவன் மோகனக் கல்லைத் தாங்குவானா? 11680
சோற்றில் இருக்கும் கல்லைப் பொறுக்கு என்றால் சொக்கநாதர் கோயில் மதிலைப் பிடுங்குகிறேன் என்கிறான்.
சோற்றில் இருக்கும் கல்லைப் பொறுக்க முடியவில்லை. சொக்கநாத சுவாமி அடிக்கல்லை பேர்க்கிறானாம்.
சோற்றில் இருந்த கல்லை எடுக்காதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?
- (இருந்த ஈயை)
சோற்றில் கல் எடுக்க அறியாதவன் முகவணைக் கல் எடுப்பானா?
சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்க மாட்டாதவன், ஞானத்தை எப்படி அறிவான்? 11685
சோற்றிலே மலம்; தெளிவாய் இறு.
- (வாரு.)
சோற்றின் மறைவில் பத்தியம் பிடிக்கிறது.
சோற்றுக்கு அலைந்தவன் சோளத்தைப் போடு; காய்க்கு அலைந்தவன் பீர்க்கைப் போடு.
சோற்றுக்கு ஆளாய்ப் பறக்கிறான்.