பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

29


ஞாயிற்றுக் கிழமை சென்றால் நாய் படாத பாடு.

(பிறந்தால்.)

ஞாயிற்றுக் கிழமை நாய்கூட எள்ளுக் காட்டில் நுழையாது.

ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர் நாய் படாத பாடு படுவர்.

ஞாயிற்றுக்கிழமை ருதுவானால் நாய்படாத பாடுதான்.

ஞாயிற்றுக் கிழமை மறைப்பார் இல்லை. 11740

(பழமொழி நானூறு)


ஞானத்துக்கு உலகம் பகை; உலகத்துக்கு ஞானம் பகை.

ஞானம் இல்லாத சேயர்கள் ஆவின் கற்றிலும் அதிகம் அல்ல.

ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை.

ஞானம் தனத்தையும் கனத்தையும் கொடுக்கும்.

ஞானம் முற்றி எலும்பு எலும்பாய்க் கழிகிறது. 11745


ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.

(நாலு.)

ஞானிக்கு மன்னன் துரும்பு.

ஞானிக்கு இல்லை, இன்பமும் துன்பமும்.

ஞானிக்கு இல்லை, ஞாயிறும் திங்களும்.

ஞானிக்கு நார் துரும்பு. 11750


ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லையே.

ஞானியார் ஆடும் திருக்கூத்தோடே நானும் ஆடுகிறேன்.