தமிழ்ப் பழமொழிகள்
29
ஞாயிற்றுக் கிழமை சென்றால் நாய் படாத பாடு.
- (பிறந்தால்.)
ஞாயிற்றுக் கிழமை நாய்கூட எள்ளுக் காட்டில் நுழையாது.
ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர் நாய் படாத பாடு படுவர்.
ஞாயிற்றுக்கிழமை ருதுவானால் நாய்படாத பாடுதான்.
ஞாயிற்றுக் கிழமை மறைப்பார் இல்லை. 11740
- (பழமொழி நானூறு)
ஞானத்துக்கு உலகம் பகை; உலகத்துக்கு ஞானம் பகை.
ஞானம் இல்லாத சேயர்கள் ஆவின் கற்றிலும் அதிகம் அல்ல.
ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை.
ஞானம் தனத்தையும் கனத்தையும் கொடுக்கும்.
ஞானம் முற்றி எலும்பு எலும்பாய்க் கழிகிறது. 11745
ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.
- (நாலு.)
ஞானிக்கு மன்னன் துரும்பு.
ஞானிக்கு இல்லை, இன்பமும் துன்பமும்.
ஞானிக்கு இல்லை, ஞாயிறும் திங்களும்.
ஞானிக்கு நார் துரும்பு. 11750
ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லையே.
ஞானியார் ஆடும் திருக்கூத்தோடே நானும் ஆடுகிறேன்.