பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தமிழ்ப் பழமொழிகள்


தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?

தகப்பன் பேரை எடுக்கிற பின்ளையே பிள்ளை.

தகப்பன் வெட்டின கிணறு என்று தலைகீழாய் விழுவார்களா? 11775

(துரவென்று விழலாமா.)


தகப்பனுக்கு இட்டது தலைச்சனுக்கு.

தகப்பனுக்க ஒட்டுக் கோவணமாம்; மகன் எடுத்துப் போட்டது வேண்டும் என்கிறான்.

தகப்பனுக்கு ஒட்டுக் கோவணமாம்; பிள்ளைக்கு எங்கே இழுத்துப் போர்த்துகிறது.

தகப்பனுக்குக் கட்டக் கோவணம் இல்லை; மகன் தஞ்சாவூர் மட்டும் நடை பாவாடை போடச் சொன்னானாம்.

தகப்பனுக்குக் காய்ச்சுகிற பாலில் ஆடையைத் துவைக்கிற பிள்ளை. 11780

(குதியைத் தேய்க்கிற பிள்ளை.)


தகப்பனைக் கொன்ற பாவம் மாமியார் வீட்டில் ஆறு மாதம் இருந்தால் போகும்.

(போதும்.)

தகப்பனைக் கொன்ற பிள்ளை.

தங்கக் கத்தி என்று கழுத்தை அறுத்துக் கொள்ளலாமா?

(சூரி.)

தங்கக் கத்தி என்று வயிற்றைக் கிழித்துக் கொள்ளலாமா?

தங்கக் குடத்துக்குப் பொட்டு இட்டுப் பார்த்தாற் போல். 11785


தங்கக் கொழு என்றால் நெஞ்சிலா இடித்துக் கொள்வது?

தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆகுமா? தண்ணீர்க் குடமும் தன் குடம் ஆகுமா?

தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால் தவத்துக்குப் போவானேன்.

(திருவிளையாடற் புராணம்.)

தங்கச் செருப்பு ஆனாலும் தலைக்கு ஏறாது.

தங்கத் தூள் அகப்பட்டாலும் செங்கல் தூள் அகப்படாது. 11790


தங்கத்தை உருக்கி விட்டது போல.

தங்கத்தைக் குவிக்கிறேன் என்றாலும் தன் புத்தி விடுகிறது இல்லை என்கிறான்.

தங்கத்தைத் தவிட்டுக்கு மாறுவதா?

தங்கத்தை விற்றுத் தவிடு வாங்கினது போல.