பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

41


தர்மமே ஜயம்.

தரகுக்காரப் பயலுக்குத் தன் காடு பிறன் காடு ஏது? 11995


தரத்தர வாங்கிக் கொள்ளுகிறாயா? தலையை முழுகிப் போட்டுப் போகட்டுமா?

தராதரம் அறிந்து புராதனம் படி.

தரித்திரப் பட்டாலும் தைரியம் விடாதே.

தரித்திரப் பட்டி மகன் பேர் தனபால் செட்டி.

தரித்திரம் அறியாப் பெண்டாட்டியால் பயன் இல்லை. 12000


தரித்திரம் பிடித்தவள் தலைமுழுகப் போனாளாம்; அப்போதே பிடித்ததாம் மழையும் தூற்றலும்.

தரித்திரம் பிடித்தவள் தலை முழுகப் போனாளாம்; ஏகாதசி விரதம் எதிரே வந்ததாம்.

தரித்திரன் சந்தைக்குப் போனால் தங்கமும் பித்தளை ஆகும்.

தரித்திரனுக்கு உடம்பெல்லாம் வயிறு.

தரித்திரனுக்குப் பணம் கிடைத்தது போல. 12005

(புதையல் கிடைத்தது போல.)


தரித்திரனுக்கு விஷம் கோஷ்டி.

தரைக்குப் பண்ணாடி; மலைக்கு மண்ணாடி.

தரையில் படுத்தவன் பாய்க்குப் போவான்; பாயில் படுத்தவன் தரைக்கு வருவான்.

தரக்கு வந்தால் சரக்கு விற்கும்.

(தரகு வந்தால்.)

தரை நீக்கிக் கரணமா? 12010


தரையில் தேளும் தண்ணீரில் தேளி மீனும் கொட்டியது போல.

தலை அளவும் வேண்டாம்; அடி அளவும் வேண்டாம்; குறுக்கே அள அடா படியை.

தலை ஆட்டித் தம்பிரான்.

தலை இடிக்குத் தலையணையை மாற்றி ஆவது என்ன?

தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். 12015

(சங்கடமும்.)


தலை இருக்க வால் ஆடுமா?

தலை இருக்கிற இடத்தில் கழுத்து வரட்டும் பார்த்துக் கொள்வோம்.

தலை எழுத்து இருக்கத் தந்திரத்தால் ஆவது என்ன?