பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

43


தலைகீழ் நின்றாலும் வராது.

தலைகீழ்ப் பாடம்.

தலைகீழாய் இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலந்தான் வந்து கூட வேண்டும்.

(வந்தால்தான் கூடும்.)

தலைகீழாய் நிற்கிறான். 12045


தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தைரியம் சொன்னாளாம்.

(புத்தி சொன்னாளாம்.மருத்துவம் பார்த்தாளாம்.)

தலைச்சன் பிள்ளைக்காரிக்குத் தாலாட்டும், தாலி அறுத்தவளுக்கு ஒப்பாரியும் தாமே வரும்.

(அகமுடையான் செத்தவளுக்கு.)

தலைச்சன் பிள்ளைக்கு இல்லாத தண்டையும் சதங்கையும் இடைச்சன் பிள்ளைக்கு வந்தனவா?

தலைச்சனுக்குத் தாலாட்டும் கணவன் செத்தால் அழுகையும் தாமே வரும்.

தலைச் சுமை தந்தான் என்று தாழ்வாய் எண்ணாதே. 12050


தலை சுழன்றவனுக்கு உலகமெல்லாம் சுற்றும்.

தலை சொறியக் கொள்ளி தானே வைத்துக் கொண்டது.

தலை சொறியக் கொள்ளியா?

(கொள்ளி போல.)

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.

(பிழைத்தது பாக்கியம்.)

தலை தெரியாமல் எண்ணெய் தேய்ப்பதா? 12055


தலை தெரியாமல் தத்தித் தடவுகிறது.

தலை தெறிக்க ஓடி வருதல்.

தலை நோய்க்குத் தலையணையைத் திருப்பிப் போட்டால் தீருமா?

தலை நோவும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.

தலைப்பாகை மாற்றுபவன். 12060


தலைப் பிள்ளை ஆண்; தப்பினால் பெண்.

தலைப் புறத்தைத் தந்தால் தருவேன் மருந்துப் பையை.

தலை பெரிது என்று கல்லில் முட்டிக் கொள்ளலாமா?

தலை போக வந்தது தலைப்பாகையோடு போயிற்று.

(பாரதக் கதை.)

தலை போனாலும் விலையைச் சொல்லாதே. 12065