பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தமிழ்ப் பழமொழிகள்


தவம் இருக்க அவம் செய்தாற் போல்.

தவழும் குழந்தைக்கு நடக்கும் குழந்தை யமன்.

தவளை கத்தினால் உடனே மழை.

தவளை கூவிச் சாகும்.

தவளை தண்ணீருக்கு இழுக்கிறது; ஓந்தி மேட்டுக்கு இழுக்கிறது. 12120

(ஓணான்.)


தவளை தன் வாயால் கெடும்.

தவளை தாமரைக்குஅருகில் இருந்தும் அதன் தேனை உண்ணாது.

தவளை வாழ்வும் தனிசு வாழ்வும் ஆகா.

(தனிசு-கடன்.)

தவிட்டுக்கு ஆசைப்பட்டுத் தீட்டிய அரிசியை நாய் கொண்டு போனதாம்.

(தவிட்டுக்கு மன்றாடி)

தவிட்டுக்கு வந்த கைதான் தங்கத்துக்கும் வரும். 12125

(தனத்துக்கும்.)


தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை தன் பிள்ளை ஆகுமா?

தவிட்டுப் பானைக்குள்ளே எலி குமரி ஆனது போலே.

தவிட்டை நம்பிப் போகச் சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று.

தவிடு அள்ளின கை தனம் அள்ளும்.

தவிடு தவிடு என்றால் குருடு குருடு என்கிறான். 12130


தவிடு தின்கிறதில் ஒய்யாரம் வேறா?

தவிடு தின்பவன் அமுதை விரும்புவானா?

தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற் போல.

தவிடு தின்னும் அம்மையாருக்கு விளக்குப் பிடிக்க ஓர் ஆளா?

தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிப்பவன் மந்திரி. 12135


தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத பாவி.

தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு; பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.

தழைத்த மரம் வளையாத கணக்கும் உண்டோ?

(அருட்பா.)

தழைந்து போனால் குழைந்து வருவான்.

தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளைப் பிடிப்பானேன்? 12140


தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளை மெள்ள மெள்ளத் திறப்பானேன்?

தள்ளரிய தாறு வந்து தாய் வாழையைக் கெடுத்தாற் போல.