பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

47


தள்ளாதவன் மனைவி பிள்ளைத்தாய்ச்சி; தள்ளிவிட்டு ஓடுதாம் குள்ளநரி.

தள்ளாவிட்டால் ஆசாரம் இல்லை; இல்லாவிட்டால் உபசாரம் இல்லை.

தள்ளாதவனுக்கு ஆசாரம் இல்லை; தரித்திரனுக்கு உபசாரம் இல்லை. 12145

(இல்லாதவருக்கு )


தள்ளி ஊட்டினது தலைக்குட்டி.

தள்ளிப் பேசினாலும் தழுவிக் குழைகிறது.

(குழைகிறதா?)

தளபதி இல்லாத தளம், கரை இல்லாத குளம்.

தளர்ந்த கிழவனுக்குச் சோறும், இடிந்த சுவருக்கு மண்ணும் உண்டானால் சில நாட்கள் நிற்கும்.

தறுதலைக்குத் தயவு ஏது? 12150


தறுதலைக்கு ராஜா சவுக்கடி.

தன் அழகு தனக்குத் தெரியாது.

தன் அறிவு வேணும்; இல்லை என்றால் சொல்லறிவு வேணும்.

தன் ஆள் இல்லா வேளாண்மையும்; தான் உழாத நிலமும் தரிசு.

தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே வருத்தும். 12155

(ஆளும்.)


தன் இனம் தன்னைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும்.

தன் உயிர் கருப்பட்டி.

(வெல்லம்.)

தன் உயிர் தனக்குச் சர்க்கரை.

தன் உயிர் போல மண் உயிர் காக்க.

(திணை. எண்ணுவர்.)

தன் உயிரைத் தின்கிறான். 12160


தன் உயிரைப் போல மண்ணுயிருக்கு இரங்கு.

(மண்ணுயிரை நினை. மண்ணுயிரையும் காக்கவேண்டும்.)

தன் ஊர் கிழக்கு, தங்கின ஊர் மேற்கு, வேட்டகம் தெற்கு, வேண்டா ஊர் வடக்கு.

(தலைவைத்துப் படுக்கும் திசை.)

தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும்.

தன் ஊரில் தாய் அடிக்காதவன் அயலூரில் ஆனை அடித்தானாம்.

தன் ஊருக்கு அன்னம், பிற ஊருக்குக் காகம். 12165