பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தமிழ்ப் பழமொழிகள்



தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?

தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்.

(கொண்டு.)

தன் பாவம் தவினோடே.

தன் பானை சாயப் பிடிக்கிறது இல்லை.

(பிடிப்பார் உண்டோ?)

தன் பிள்ளை என்று தலைமேல் வைத்துக் கொள்ளலாமா? 12220


தன் பிள்ளைக்குப் பதைக்காதவள் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா?

தன் பிள்ளையைத் தான் அடிக்கத் தலையாரியைச் சீட்டுக் கேட்கிறது போல.

(கேட்டு வர வேண்டுமா?)

தன் மகன் போனாலும் குற்றம் இல்லை; மருமகள் தாலி அறுக்க வேண்டும்.

தன் மனம் பொன் மனம்.

தன் மா ஆனால் தின்னாளோ? தானே வாரி மொக்காளோ? 12225


தன் முதுகில் அழுக்கு இருப்பது தெரியாமல் பிறன் முதுகில் அழுக்கு அழுக்கு என்பது போல.

தன் முதுகு ஒரு போதும் தனக்குத் தெரியாது.

தன் மூக்கு அறுபட்டாலும் எதிரிக்குச் சகுனப் பிழை.

தன்மை உடைமை தலைமை.

தன் வயிற்றைத் தான் உலர வைக்கலாமா? 12230


தன் வாய்க் கஞ்சியைக் கவிழ்த்துப் போட்டான்.

தன் வாயிலே சீதேவி, முன் வாயிலே மூதேவி.

தன் வாயால் தவளை கெட்டது.

தன் வாயால்தான் கெட்டதாம் ஆமை.

தன் வாயால் தான் கெட்டான். 12235


தன் வாலைச் சுற்றிக் கொள்ளும் நாய் போல.

தன் வினை தன்னைச் சுடும்; ஒட்டப்பம் வீட்டைச் சுடும்.

(பட்டினத்தார் கதை.)

தன் வீட்டு அகமுடையான் தலை மாட்டிலும் அசல் வீட்டு அக முடையான் கால் மாடும் நலம்.

(கால் மாட்டிலும்.)

தன் வீட்டுக் கதவை இரவல் கொடுத்துவிட்டு விடிய விடிய நாய் காத்தாளாம்.