56
தமிழ்ப் பழமொழிகள்
தாடிக் கொம்புத் தள வரிசை மாதிரி.
தாடி பற்றி எரியும் போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்டது போல.
தாடி வளர்த்தவர்கள் எல்லாம் தத்துவ ஞானிகளா? 12355
தாதத்தியைக் கெடுத்தவன் தாதன்; குயவனைக் கெடுத்தவள் குயத்தி.
தாதன் ஆட்டம் திருப்பதியிலே தெரியும்.
தாதன் கையிலே அகப்பட்ட குரங்கு போல அலைகிறான்.
தாதனும் பறையனும் போல.
தாதனைக் கண்டால் ரங்கன். ஆண்டியைக் கண்டால் லிங்கன். 12360
- (தூதனைக்கண்டால் லிங்கன்.)
தாதா கோடிக்கு ஒருவர்.
- (ஒளைவயார் பாடல்.)
தாது அறியாதவன் பேதை வைத்தியன்.
தாதும் இல்லை, பிராதும் இல்லை.
தாபரம் இல்லா இளங் கொடி போல.
தாம் கெட்டாலும் பிறருக்குக் கேடு நினைக்கல் ஆகாது. 12365
தாம்பும் அறுதல், தோண்டியும் பொத்தல்.
தாம்பூலத் தட்டுச் சாதிக்காதது இல்லை,
- (சிசுபாலன் வதம்.)
தாம்பை விட்டு வாலைப் பிடிக்கிறது போல,
தாம்வளர்த்ததோநேச்சு மாமரம் ஆயினும் கெடார்.
- (திருவாசகம்.)
தாம் வளைவார் பிறருக்கு ஊற்றங்கோள் ஆகார். 12370
தாமதம் தாழ்வுக்கு ஏது.
தாமரை இல்லாத் தடாகம் போல.
- (சந்திரன் இல்லா வானம் போல.)
தாமரை இலைத் தண்ணீர் போல.
தாமரை இலையில் தண்ணீரைப் போல் தவிக்கிறான்.
தாமரையில் விழுந்த மழைத் துளி போல. 12375
தாய் அவிடே, தாக்கோல் இவிடே.
- (மலையாளம்.)
தாய் அற்றால் சீர் அறும்.
தாய் அறியாத சூல் இல்லை.
- (தன் நெஞ்சு அறியாப் பொய் இல்லை.)