பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தமிழ்ப் பழமொழிகள்


தாடிக் கொம்புத் தள வரிசை மாதிரி.

தாடி பற்றி எரியும் போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்டது போல.

தாடி வளர்த்தவர்கள் எல்லாம் தத்துவ ஞானிகளா? 12355


தாதத்தியைக் கெடுத்தவன் தாதன்; குயவனைக் கெடுத்தவள் குயத்தி.

தாதன் ஆட்டம் திருப்பதியிலே தெரியும்.

தாதன் கையிலே அகப்பட்ட குரங்கு போல அலைகிறான்.

தாதனும் பறையனும் போல.

தாதனைக் கண்டால் ரங்கன். ஆண்டியைக் கண்டால் லிங்கன். 12360

(தூதனைக்கண்டால் லிங்கன்.)


தாதா கோடிக்கு ஒருவர்.

(ஒளைவயார் பாடல்.)

தாது அறியாதவன் பேதை வைத்தியன்.

தாதும் இல்லை, பிராதும் இல்லை.

தாபரம் இல்லா இளங் கொடி போல.

தாம் கெட்டாலும் பிறருக்குக் கேடு நினைக்கல் ஆகாது. 12365


தாம்பும் அறுதல், தோண்டியும் பொத்தல்.

தாம்பூலத் தட்டுச் சாதிக்காதது இல்லை,

(சிசுபாலன் வதம்.)

தாம்பை விட்டு வாலைப் பிடிக்கிறது போல,

தாம்வளர்த்ததோநேச்சு மாமரம் ஆயினும் கெடார்.

(திருவாசகம்.)

தாம் வளைவார் பிறருக்கு ஊற்றங்கோள் ஆகார். 12370


தாமதம் தாழ்வுக்கு ஏது.

தாமரை இல்லாத் தடாகம் போல.

(சந்திரன் இல்லா வானம் போல.)

தாமரை இலைத் தண்ணீர் போல.

தாமரை இலையில் தண்ணீரைப் போல் தவிக்கிறான்.

தாமரையில் விழுந்த மழைத் துளி போல. 12375


தாய் அவிடே, தாக்கோல் இவிடே.

(மலையாளம்.)

தாய் அற்றால் சீர் அறும்.

தாய் அறியாத சூல் இல்லை.

(தன் நெஞ்சு அறியாப் பொய் இல்லை.)