பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தமிழ்ப் பழமொழிகள்

57


தாய் இட்டி பேரை ஊர் இட்டு அழைக்கும்.

தாய் இடப் பிள்ளை இடந் தானே மனம் மகிழ. 12380


தாய் இருந்தால் நாய் வருமா?

தாய் இல்லாக் குழந்தை தானே வளரும்.

தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.

தாய் இல்லாத பிள்ளை ஊருக்கு ஆகுமா?

(ஆகாது.)

தாய் இல்லாத பிள்ளை தறுதலை. 12385


தாய் இல்லாத பிறந்தகமும் கணவன் இல்லாத புக்ககமும்.

தாய் இல்லாதவனுக்கு ஊர் எல்லாம் தாய்.

தாய் இல்லாப் பிள்ளை என்றால் தேவடியாள் கேட்க மாட்டாள்.

தாய் இல்லாப் பிள்ளைக்கு நாய் பட்ட பாடு.

தாய் இல்லாப் பிள்ளையைத் தலையிலே தட்டலாமா? 12390


தாய் உள்ளமட்டும் சீராட்டு.

தாய் உறவோ? நாய் உறவோ?

தாய் ஊட்டாத சோற்றைத் தயிர் ஊட்டும்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்.

தாய் ஏழு அடி பாய்ந்தால் மகள் எட்டு அடி பாய்வாள். 12395


தாய் ஒரு பாக்குத் தான் கமுகத் தோப்பு என்கிறாள்.

தாய்க் கண்ணோ, நாய்க் கண்ணோ?

தாய்க் கிழவி எப்போது சாவாளோ? தாழ்வாரம் எப்போது ஒழியுமோ?

தாய்க்கிழவியும் வெறிநாயும் பிடித்தால் விடார்.

தாய்க்கு அடங்காதவன் ஊருக்கு அடங்கான். 12400


தாய்க்கு அடங்காதவன் ஊருக்கு அடங்கான்; ஊருக்கு அடங்காதவன் ஒருவருக்கும் அடங்கான்,

தாய்க்கு அடுத்தது தாரம்.

தாய்க்கு ஆகாத பிள்ளை ஊருக்கு ஆகாது.

(+ஊருக்கு ஆகாத பிள்ளை ஒருவருக்கும் ஆகாது. ஊருக்கு ஆகுமா?)

தாய்க்கு ஆகாத பிள்ளையும் தட்டானுக்கு ஆகாத பொன்னும் பதர்.

தாய்க்கு ஆகாத மகன் ஆருக்கு ஆவான்? 12405