பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தமிழ்ப் பழமொழிகள்



தாய்க்கு உள்ளது மகளுக்கு.

தாய்க்கு ஒளித்த சூலா?

தாய்க்குச் சுகம் ஆனால் கர்ப்பத்துக்குச் சுகம்.

தாய்க்குச் சோறு இருக்கிறது ஊருக்குப் புகழ்ச்சியா?

தாய்க்குத் தலைப் பிள்ளை. 12410


தாய்கருத் தவிடு இடியான்; தம்பிரானுக்கு இரும்பு இடிப்பான்.

(அடிப்பான்.)

தாய்க்குத் தாலி செய்தாலும் தட்டான் திருடுவான்.

தாய்க்குப் பின் தகப்பனும் தாயாதி.

தாய்க்குப் பின் தாரம் தன்மை கெட்டால் அபதாரம்.

தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன். 12415


தாய்க்கு மிஞ்சி உறவும் இல்லை; சுக்குக்கு மிஞ்சி மருந்தும் இல்லை.

தாய்க்கு மூத்துத் தகப்பனுக்கு விளக்குப் பிடிக்கிறான்.

(வழக்கு முடிப்பான்.)

தாய்க்கு விளைந்தாலும் தனக்கும் விளைய வேண்டும்.

தாய்க்கு விளைந்தாலும் தனக்கு விளையத் தவம் செய்வாராம்.

தாய் கஷ்டம் தலையிலே; மகள் கஷ்டம் மடியிலே, 12420


தாய் காணாது தவிக்கும் சேய்போல்.

தாய் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள், மகன் கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.

தாய் கூடப் பிறந்த மாமனிடத்தில் குலமும் கோத்திரமும் சொன்னது போல.

தாய் கேட்டுப்பட்டி, தகப்பன் காவடிப்பட்டி, தங்கை மோருப்பட்டி! தமக்கை சாதப்பட்டி.

தாய் கைக்குத் தோஷம் இல்லை. 12425


தாய் கையில் இருக்கிற தளத்தைப் பார்க்கிலும் தன்கைத் தளமே மேல்,

(பொன்னைக் காட்டிலும்.)

தாய் கொட்டையூரில் முட்டி எடுக்கிறாள், பையன் கும்பகோணத்தில் கோதானம் பண்ணுகிறான்.

(மூட்டி-பிச்சை.)

தாய் கொண்டு பொறுக்காததை ஆர் பொறுப்பார்?

தாய்ச் சீலைக்குக் சாண்துணி இல்லை; தலைக்கு மேலே சரிகை மேற்கட்டி.

(தாய்ச்சீலை-கோவணம்.)

தாய் செத்தால் மணம், மகள் செத்தால் பிணம். 12430