தமிழ்ப் பழமொழிகள்
59
தாய் செத்தாள்; மகள் திக்கற்றாள்.
தாய் சொல் கேளாப் பிள்ளை தறுதலை.
தாய் சொல் கேளாதவன் நாய்வாய்ச் சீலை.
தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை.
தாய் சொல் விரதத்தை விட்டு வேறே விரதத்தை எடுக்கிறதா? 12435
தாய் தகப்பன் பட்டினி கிடக்க ஊரில் அன்னதானம் செய்கிறானாம்.
தாய் தட்டுப் பிச்சை எடுக்கிறாள்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் பண்ணுகிறான்.
தாய் தந்தை இறந்தாலும் பிழைக்கலாம்; நாணயம் இழந்தால் பிழைக்கப்படாது.
தாய் தவிட்டுக்கு அழுகிறாள்; மகள் இஞ்சிப் பச்சடி கேட்கிறாள்.
- (அழுகையிலே).
தாய் தன்னை அறியாத கன்று இல்லை. 12440
- (கம்பராமாயணம்.)
தாய் தனக்கு ஆகாத மகள் ஆர்தனக்கு நல்லவள் ஆவாள்?
தாய் தேடியும் பிள்ளை தேடியும் மடிசீலை ஒன்று.
தாய் தூற்றினால் ஊர் தூற்றும்; கொண்டவன் துாற்றினால் கண்டவன் தூற்றுவான்.
தாய் நக்கத் தழுவணி உதிர.
- (தழுவணி-சேனை.)
தாய் பேர் போனாலும் போகட்டும்; தம்பி சக்கிலியனானால் சரி. 12445
- (தம்பியை இழித்தபடி.)
தாய் பொறுக்காததை ஊர் பொறுக்குமா?
தாய் பொன்னிலும் மாப்பொன் திருடுவான் தட்டான்.
தாய்போல் பெண்ணும் தகப்பன் போல் பிள்ளையும்.
தாய் மனம் பித்து, தகப்பன் மனம் கல்.
தாய் மனைக்கு வந்தது பிள்ளை மனைக்கும். 12450
தாய் மாமன் இடத்தில் குலம் கோத்திரம் சொன்னாளாம்.
தாய் மாமன் வீட்டிலேயா குலம் கோத்திரம் கேட்கிறது?
தாய் மிதிக்க ஆகா முடம்.
- (பழமொழி நானூறு.)