பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தமிழ்ப் பழமொழிகள்


தாய் மிதிக்கக் குஞ்சு முடம் ஆகாது.

தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டா. 12455


தாய் முகம் பார்க்கும் சேய் முகம் போல.

தாய் முலை குடித்துத் தாகம் தணிய வேணும்.

தாய் முலைப்பாலுக்குப் பால் மாறினது போல.

தாய் வசவு பிள்ளைக்குப் பலிக்குமா?

தாய் வயிற்றில் இராது பிறந்தது போல். 12460


தாய் வயிற்றைப் பார்ப்பாள்; பெண்டாட்டி மடியைப் பார்ப்பள்.

(பெண்டாட்டி இடுப்பைப் பார்ப்பாள்.)

தாய் வளர்த்த பிள்ளை தறுதலை.

தாய் வார்த்தை கேளாத பிள்ளை நாய் வாயிற் சேலை.

தாய் வீட்டுக்குப் போனாலும் தன்னைப் பேணிப் போக வேணும்.

தாய் வீட்டுப் பெருமையை அக்காள் தங்கச்சி பேசிக் கொண்டாற்போல. 12465


தாய் வீடு ஓடிய பெண்ணும் பேயோடாடிய கூத்தும்.

தாய் வைத்த பெயர் தலையில் இருக்க நாய் வைத்த பெயர் நடு நாயகமாக விளங்கிற்றாம்.

தாயாதிக்காரன் வாழவைத்த வீடு உண்டா?

தாயாதிக்குக் குணம் இல்லை; கோவணத்துக்கு மணம் இல்லை.

தாயாதிச் சண்டை. 12470


தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.

தாயும் தகப்பனும் தவிரச் சகலமும் வாங்கலாம்.

தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த பங்காரவாசி.

தாயும் பிள்ளையும் ஆனால் தாய் எந்த வழியோ பிள்ளையும் அந்த வழி.

தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே. 12475


தாயே என்று போனாலும் நாயே என்று வருகிறது.

தாயை அடக்கி அவிசாரி போனாளாம்.

(போனாற்போல.)

தாயை அடக்கி மகள் ஊரில் சுற்றுகிறாளாம்.