தமிழ்ப் பழமொழிகள்
61
தாயைக் கண்ட கன்று போல.
தாயைக் கன்டான்; மகளைக் கொண்டான். 12480
தாயைக் கொன்றவன் சொல்லுக்கு அஞ்சான்.
தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே பாதிப் பேர்.
தாயைச் சேர்ந்த உறவு ஆனாலும் அறுத்துத்தான் உறவாட வேண்டும்.
தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால் பெண்ணைச் சந்தைக் கடையில் பார்க்கலாம்.
தாயைப் பகைத்தாலும் ஊரைப் பகைத்தல் ஆகாது. 12485
தாயைப் பழித்தவன் சேயைப் பழிப்பான்.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே.
தாயைப் பழித்து மகள் அவிசாரி ஆடுகிறாள்.
- (ஆடினாளாம்.)
தாயைப் பழித்து மகள் செய்வது போல.
தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள்; பாலைப் பார்த்துப் பசுவைக் கொள். 12490
தாயைப் பார்த்து மகளைக் கொள்.
தாயைப் பிரிந்த கன்று போல.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே.
- (தள்ளினாலும் தள்ளாதே.)
தாயைப் போல உறவில்லை; காயத்திரியைப் போல மந்திரம் இல்லை.
தாயைப் போல் பிள்ளை; நாயைப் போல் வால். 12495
தாயைப் போல் பிள்ளை; நூலைப் போல சீலை.
தாயை மறக்கடிக்கும் தயிரும் பழஞ் சோறும்.
தாயோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம்.
தாயோடு போயிற்றுச் செல்வம், தேரோடு போயிற்றுத் திருநாள்.
தாரத்தை ரட்சியாதவன் வீரம் எதற்கு உதவும்? 12500
தாரம் தேடக் கிடைப்பாள்; தம்பி தேடக் கிடைப்பானா?
தாரம் வாய்த்தது வள்ளுவருக்கு; தம்பி வாய்த்தது ராமருக்கு.
தாரமும் குருவும் தலைவிதிப்படி.
- (தலையில் எழுத்து.)
தாரமும் குருவும் தன் வினைப் பயனே.
தாராப் பெட்டை போல. 12505