பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

63


தாழ்வதும் வாழ்வதும் சகடக் காய் போல.

தாழ்விலே பெருமையும், வாழ்விலே தாழ்மையும் வேண்டும். 12530


தாழ உழுதால் தளிர் ஓடும்.

(ஆழ உழுதால் ஆட்டுரத்துக்கும் அதிகம்.)

தாழப் பொறுத்தாலும் வாழப் பொறுக்க மாட்டாள்.

தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்.

(குடலும்.)

தாழியும் தாழியும் தமுக்கிட்டாற் போல.

தான் உண்ட நீரைத் தலையாலே தரும் தென்னை. 12535

தாள் ஏற நீர் ஏறும்.

தாளம், வேதாளம்.

(பரிகாசம்.)

தாளுக்கும் அகப்படாமல் தாழ்ப்பாளுக்கும் அகப்படாமல்.

தாறு புறப்பட்டுத் தாய் வாழையைக் கெடுத்தாற் போல.

தாறு மாறும் தக்கட வித்தையும். 12540


தான் அடங்கத் தன் குலம் அடங்கும்.

(தன் குலம் விளங்க.)

தான் அறியாச் சிங்காரம் தன் பிடரிக்குச் சேதம்.

(யாழ்ப்பாண வழக்கு; தனக்கு அடாச் சிங்காரம்; சிங்களம் சிங்களம் அன்று.)

தான் அறியாத ஆவேசம் உண்டா?

தான் அறியாதது நஞ்சோடு ஒக்கும்.

தான் ஆடாவிடினும் தன் சதை ஆடும். 12545


தான் ஆண்ட உலக்கையும் தங்கப் பூஞ்சரமும் தலைமருமகளுக்கு.

(பூஞ்சரடும்.)

தான் இருக்கிற அழகுக்குத் தடவிக் கொண்டாளாம் வேப்பெண்ணெயை.

தான் உள்ள போது உலகம்.

தான் ஏற நீர் ஏறும்.

தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். 12550


தான் கள்ளன் பிறரை நம்பான்.

தான் கற்ற ஒன்றைத் தரிக்க உரை.

தான் குடிக்கக் கூழ் இல்லை; வாரத்துக்கு இரண்டு பன்றிக் குட்டி வளர்க்கிறான்.