பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தமிழ்ப் பழமொழிகள்


தான் குடிக்காத பாலைக் கவிழ்த்து விடுகிறதா?

தான் கும்பிடும் தெய்வம் ஆனாலும் பொய்ச் சத்தியம் செய்தால் பொறுக்குமா? 12555


தான் கெட்டதும் அல்லாமல் சந்திர புஷ்கரிணியையும் கெடுத்தானாம்.

(சந்திர புஷ்கரிணி- ஸ்ரீரங்கத்தில் உள்ளதொரு தீர்த்தம்.)

தான் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.

தான் சம்பாதித்தால் தனக்கு உதவும்; ஊர் சம்பாதித்தால் உதவமாட்டாது.

(உதவுமா?)

தான் சாக மருந்து உண்பார் இல்லை.

(தின்பார்களா?)

தான் செத்தபின் உலகம் கவிழ்ந்தென்ன, நிமிர்ந்தென்ன? 12560


தான் செத்துக் கைலாசம் காணவேண்டும்.

தான் தளும்பல், பிறருக்கு ஊன்றுகோல்.

தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பைத்தியக்காரப் பட்டமும் கட்டிக் கொண்டான்.

தான் திருடி அயல் வீட்டுக்காரரை நம்பமாட்டாள்.

(அயலாரை.)

தான் திருடி, பிறரை நம்பாள்; சிறுதனக் கள்ளி விருந்தறியாள், 12565


தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.

(எரிக்கும்.)

தான் தின்னச் சோற்றுக்கு வழியைக் காணோம்; வாரத்துக்குக் கோழி வளர்த்தானாம்.

தான் தின்னத் தவிட்டைக் காணோம்; வாரத்துக்கு இாண்டு பன்றிக் குட்டியாம்.

தான் தின்னத் தவிடு இல்லை; தங்கத்தாலே தாலி தொங்கப்போடச் சொன்னாளாம்.

தான் தின்னித் தம்பிரானாய் இருக்கிறான். 12570


தான் தின்னி பிள்ளை வளர்க்காள், தவிடு தின்னி கோழி வளர்க்காள்.

தான் தேடாத பொன்னுக்கு மாற்றும் இல்லை, உரையும் இல்லை.

தான் தேடிய பொருளைச் செலவழிக்க அடுத்த வீட்டுக்காரன் உத்தரவு வேண்டுமா?