பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

65


தான் தொழும் தெய்வம் ஆனாலும் பொய்ச் சத்தியம் செய்தால் சகிக்குமா?

தான் தோன்றித் தம்பிரானாய் இருக்கிறான். 12575


தான் தோன்றிப் பெருமாள்.

தான் பத்தினியாய் இருந்தால் தேவடியாள் தெருவிலேயும் குடியிருக்கலாம்.

(பதிவிரதையானால்...வீட்டிலும்.)

தான் பாதி; தெய்வம் பாதி.

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்,

தான் பெற்ற குழந்தையைத் தானே சீராட்டுமாம் காம்பு இல்லாத கத்தரிக்காய். 12580

(பிள்ளையை,)


தான் பெற்றால் தாலாட்டு; தாயார் செத்தால் பிலாக்கணம்.

தான் போக மாட்டாதவன் தண்ணீர் மிடாவுக்குச் சீட்டு எழுதி விட்டானாம்.

தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு, விளக்குமாற்றையும் கெளவிக் கொண்டு போனதாம்.

தான் போகாத காரியத்துக்கு ஆள் போனால் ஒரு செட்டு.

(சொட்டு.)

தான் போகிற இடத்துக்குத் தம்பியை அனுப்பாதே. 12585


தான் போகிற காரியத்துக்கு அடைப்பக்காரன் ஒரு சொட்டு.

தான் போட்ட தாறு வந்து தாய் வாழையைப் பழித்த கதை.

தான் போனால் தாகத்துக்குத் தண்ணீர் கிடையாது; எழுதடா நூறு குடம் தயிருக்கு என்றானாம்.

தான் போனால் மோருக்கு வழி இல்லை; தயிருக்குச் சீட்டு எழுதி விட்டான்.

(தண்ணீர் மோருக்கு; தயிர் மிடாவுக்கு.)

தான் மகிழ வெண்ணெயும் எடுத்துப் புருஷன் மகிழப் பிள்ளையும் பெற்று. 12590


தான் வாழ்க்கைப்பட்டல்லவா தங்கைக்கு வரன் தேட வேணும்?

தான் வாழத் தன் சீலை வாழும்.

தான் வெட்டின குழி தனக்குத்தான்.

(குழியில் தானே விழுந்தது போல.)

தான்றிக் காயில் சனியன் புகுந்தது போல,

(தான்றி மரத்தில்.)

தானப்பனுக்கு மூக்கு இல்லை. ஆனால் சாட்சி சொல்ல நாக்குப் போதாதா? 12595