தமிழ்ப் பழமொழிகள்
65
தான் தொழும் தெய்வம் ஆனாலும் பொய்ச் சத்தியம் செய்தால் சகிக்குமா?
தான் தோன்றித் தம்பிரானாய் இருக்கிறான். 12575
தான் தோன்றிப் பெருமாள்.
தான் பத்தினியாய் இருந்தால் தேவடியாள் தெருவிலேயும் குடியிருக்கலாம்.
- (பதிவிரதையானால்...வீட்டிலும்.)
தான் பாதி; தெய்வம் பாதி.
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்,
தான் பெற்ற குழந்தையைத் தானே சீராட்டுமாம் காம்பு இல்லாத கத்தரிக்காய். 12580
- (பிள்ளையை,)
தான் பெற்றால் தாலாட்டு; தாயார் செத்தால் பிலாக்கணம்.
தான் போக மாட்டாதவன் தண்ணீர் மிடாவுக்குச் சீட்டு எழுதி விட்டானாம்.
தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு, விளக்குமாற்றையும் கெளவிக் கொண்டு போனதாம்.
தான் போகாத காரியத்துக்கு ஆள் போனால் ஒரு செட்டு.
- (சொட்டு.)
தான் போகிற இடத்துக்குத் தம்பியை அனுப்பாதே. 12585
தான் போகிற காரியத்துக்கு அடைப்பக்காரன் ஒரு சொட்டு.
தான் போட்ட தாறு வந்து தாய் வாழையைப் பழித்த கதை.
தான் போனால் தாகத்துக்குத் தண்ணீர் கிடையாது; எழுதடா நூறு குடம் தயிருக்கு என்றானாம்.
தான் போனால் மோருக்கு வழி இல்லை; தயிருக்குச் சீட்டு எழுதி விட்டான்.
- (தண்ணீர் மோருக்கு; தயிர் மிடாவுக்கு.)
தான் மகிழ வெண்ணெயும் எடுத்துப் புருஷன் மகிழப் பிள்ளையும் பெற்று. 12590
தான் வாழ்க்கைப்பட்டல்லவா தங்கைக்கு வரன் தேட வேணும்?
தான் வாழத் தன் சீலை வாழும்.
தான் வெட்டின குழி தனக்குத்தான்.
- (குழியில் தானே விழுந்தது போல.)
தான்றிக் காயில் சனியன் புகுந்தது போல,
- (தான்றி மரத்தில்.)
தானப்பனுக்கு மூக்கு இல்லை. ஆனால் சாட்சி சொல்ல நாக்குப் போதாதா? 12595