பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தமிழ்ப் பழமொழிகள்


தானத் தனத்தான் சகல சம்பந்தன்.

தானத்தில் நிதானம் பிரதானம்.

(தானத்தில் பெரிது நிதானம்.)

தான தர்மம் இல்லாத உடைமைக்குத் தம்பி தாண்டவராயன் புறப்பட்டான்.

தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தானாம்.

தானம் வந்த குதிரையைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே. 12600


தானமது விரும்பு.

தானாக ஆடுகிற பேய் கொட்டைக் கண்டால் விடுமா?

தானாகக் கனியாததைத் தடியால் அடித்தால் கனியுமா?

தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.

தானாகத் தின்று தலையாய்ப் போக வேண்டும். 12605


தானாகப் பழுப்பது பழமா? தள்ளிப் பழுப்பது பழமா?

தானாக வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?

தானானா என்றால் பாட்டுக்கு அடையாளம்.

தானும் இடான்; இட்டவர்களைப் பார்த்தறியான்.

தானும் உண்ணான்; தசையிலும் போடான். 12610


தானும் உண்ணான்; பிறருக்கும் கொடான்.

தானும் ஓர் ஆளாம்; தவிடும் ஒரு கொழுக்கட்டையாம்.

தானும் போகான்; தரையிலும் கிடக்கான்.

(கிடைக்கான்.)

தானும் வாழ்கிற காலத்தில் வயிறும் சிறுக்கும்; மதியும் பெருகும்.

தானே அழகி, தம்பிரான் பெண்டாட்டி. 12615


தானே அறியாதவன் பிறர் சொன்னால் கேட்பானா?

தானே கவர்னர்; தன் புத்தி பட்லர்.

தானே கனியாததைத் தடிகொண்டு அடித்தால் கனியுமா?

தானே தான் குருக்கள் என்பார் தனங்கள் வாங்கச் சதாசிவன் பேர் பூசை செய்வார்.

(தானங்கள் வாங்க.)

தானே தானே என்பது பாட்டுக்கு அடையாளம். 12620


தானே பழுத்தால் பழமா? தடியால் அடித்தால் பழமா?

தானே வளர்ந்து தவத்தார் கொடி எடுத்தாள்.

தானே வாழ்ந்து தலைமகள் அறுக்க வேண்டுமாம்.

தாகூகிண்யம் தலைநாசம்.

(தன நாசம்.)