பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொகுதி 3


செ

செக்கானிடம் சிக்கின மாடும் பார்ப்பானிடம் சிக்கிய ஆளும் உருப்படமாட்டார்கள்.

(உருப்படவே முடியாது.)

செக்கில் அரைபட்ட எள்ளுப் போல.

செக்கில் அரைபட்ட எள் திரும்ப முழுசு ஆகுமா? 11210


செக்கில் அரைபட்ட தேங்காய் பிண்ணாக்கு ஆவது போல.

(பிண்ணாக்கைப் போல.)

செக்கு அடிக்கும் தம்பூருக்கும் ஒத்து வருமா?

செக்கு அடி முண்டம் போல உட்கார்ந்திருக்கிறான்.

செக்கு அடி முத்தி, எனக்கு என்ன புத்தி?

செக்கு அளவு பொன் இருந்தாலும் செதுக்கி உண்டால் எத்தனை நாளுக்குக் காணும்? 11215


(செதுக்குத் தின்னக் குறையும். செக்குப் போல.)

செக்கு உலக்கைபோல் நிற்கிறான்.

செக்கு உலக்கையை விழுங்கினவனுக்குச் சுக்குக் கஷாயம் மருந்து ஆமா?

(தின்றவனுக்கு சுக்குக் கஷாயம் குடித்தாற் போல)

செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியாதா?

செக்குக் கண்ட இடத்தில் எண்ணெய் தேய்த்துச் சுக்குக் கடை இடத்தில் பிள்ளை பெறுவது.

(தலை முழுகிப் பிள்ளை பெறலாமா?)

செக்குக்கு ஏற்ற சிவலிங்கம். 11220


செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன்.

செக்குக்கு மாடு கொடுத்தாலும் கொடுக்கலாம்; சீவலப்பேரியில் பெண் கொடுக்கக் கூடாது.

செக்கு நக்குகிற தம்பிரானே, உன் திருவடிக்குத் தண்டம்; அந்தண்டை நக்குடா பிள்ளாய்; ஐசுவரியம் பெருகி இருப்பாய்,

செக்கு நக்குகிற தம்பிரானே, தண்டம்; நீ தென்புறம் நக்கு; நான் வடபுறம் நக்குகிறேன்.

செக்கும் சிவலிங்கமும் தெரியாதா? 11225