பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

71


திருடனைப் பிடிக்க ராஜனே வேண்டும்.

திருடனையே காவல் போட்டது போல.

திருடனை ராஜமுழி முழிக்கச் சொன்னானாம்.

திருடனை வைத்துக் கதவைச் சாத்தினது போல.

திருடி என்று தெருவில் போகக் கூடாது; அவிசாரி என்று ஆனைமீதும் ஏறலாம். 12730


திருடிக்குத் தெய்வம் இல்லை; சம்சாரிக்கு ஆணை இல்லை.

திருடிக் கொடுத்ததும் அல்லாமல் பைத்தியக்காரப் பட்டமும் கிடைத்தது.

திருடிச் சென்ற கள்ளன் நல்லவன் ஆவானா?

திருடியும் குங்குலியமும் தேவருக்கே.

திருத்தக் கல்லுக்குத் தெற்கிட்டுப் பிறந்தவன். 12735


திருத்தங்கலுக்கு மறுதங்கல் கிடையாது.

(அவ்வூரில் தங்குவது அரிது.)

திருத்தணி முருகன் வழித்துணை வருவான்.

திருத்துழாய்க்கு மணம் வாய்த்தாற் போலே.

திருநாளுக்குப் போகிறாயா என்றால் ஆம், ஆம்; திரும்பி வருகிறாயா என்றால் ஊகூம்.

திருநாளுக்குப் போகிறாயா; திண்டிக்குப் போகிறாயா? 12740


திருநாளும் முடிந்தது; எடுபிடியும் கழிந்தது.

திருநாளைக் கண் கொண்டு பார்க்கக்கூட இல்லை.

(பார்க்க முடியவில்லை.)

திருநீற்றிலே ஒட்டாதது கழற்சிக் காய்.

திருநீற்றுக் கழற்கொடிக்காய் போல.

திருந்த ஓதத் திரு உண்டாமே. 12745


திருநெல்வேலி போய்த் திரும்பினவர் இல்லை.

(தருபுர ஆதீன வழக்கு.)

திருப்தி இல்லாத எஜமான் வீண்.

திருப்பணி செய்யக் கருத்து இருந்தால் கருப்படியின் பேரிலே விருப்பு இருக்கும்.

(காத்திருந்தால்.)

திருப்பதி அம்பட்டன் வேலை.

(திருப்பதியில் நாவிதன் கிடைத்தது போல.)

திருப்பதிக் கழுதை கோவிந்தம் போடுமோ? 12750