பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தமிழ்ப் பழமொழிகள்


திருப்பதிக்குப் போய்ப் பரதேசி காலில் விழுந்தானாம்.

திருப்பதிக்குப் போயும் நாய்த்தாதன் காலில் விழுந்த மாதிரி.

திருப்பதிக்குப் போனாலும் துடைப்பம் ஒரு காசு.

(துடுப்பு.)

திருப்பதிச் சொட்டுப் படிப்படியாக எரிந்தது.

திருப்பதி நாய்க்கு இருப்பிடம் ஏது? 12755


திருப்பதியில் எத்தனையோ மொட்டை; இலந்தை மரத்தின்கீழ் எத்தனையோ கொட்டை.

திருப்பதியில் பிறந்த கடா கோவிந்தம் பாடுமா?

திருப்பதியில் மொட்டை அடித்தது போதாமல் ஸ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரிக்க வந்தான்.

திருப்பதியில் மொட்டை அடித்ததும் பற்றாதா? ஸ்ரீரங்கத்தில் சிரித்ததும் பற்றாதா?

திருப்பதியில் மொட்டைத்தாதன் குறையா? 12760


திருப்பதியில் மொட்டைத் தாதனைக் கண்டாயா?

திருப்பதி க்ஷவரம்.

திருப் பார்க்கத் தீங்கெலாம் நீங்கும்.

(சீவக சிந்தாமணி, 1151 உரை.)

திருப்புன்கூர் வெல்லம் திரட்டிக் கொடுத்தாற் போல.

திருப்பூந்துருத்தி உபசாரம்; திருநெல்வேலி ஆசாரம். 12765


திரும்பி வந்த நாயைச் செருப்பால் அடி.

திருமணை செய்யத் தெரியாதவன் தேர்வேலைக்கு அச்சாரம் வாங்கினானாம்.

திருமழபாடிப் பிள்ளையார் என்றைக்கு இருந்தாலும் ஆற்றோடே.

திருமாலை அறியாதவன் திருமாலை அறியாதவன்.

(பெருமாளை.)

திருமுலைப் பால் உண்டார் மறுமுலைப் பால் உண்ணார். 12770

(சீகாழித் திருமுலைப் பால் உற்சவத்தைப் பற்றியது.)


திருவண்ணாமலைக் குடைக்கு நிழல் உண்டு பண்ணுகிறதா?

திருவரங்கம் நடை அழகு.

திருவன் கண்ட பச்சையாப் போயிற்று.

திருவாக்குக்கு எதிர் வாக்கு உண்டா?

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார். 12775


திருவாசகத்துக்கு எதிர் வாசகம் இல்லை.

(மறு வாசகம்.)