பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

73



திருவாசல் ஆண்டியும் ஒரு வேலைக்கு உதவுவான்.

திருவாதரப்பட்ட குருக்களே தண்டம்; கரியாய்ப் போன சீஷனே கொண்டேன்.

திருவாதிரை ஒரு வாய்க் களி; திருப்பிக் கேட்டால் செருப்பால் அடி.

திருவாதிரை ஒரு வாய்க் களி; திருவாய் திறந்து ஒரு வாக்களிக்கும். 12780


திருவாதிரைக் களி தினமும் அகப்படுமா?

திருவாதிரை மழை இல்லாவிடில் திருப்பி மழை காண்பது அரிது.

திருவாதிரையில் போன பொருள் திரும்பி வருகிறது கண்டிப்பு.

திருவாரூர்த் தெரு அழகு; திருவொற்றியூர்த் தேர் அழகு.

திருவாரூர்த் தேர் அசைகிறமாதிரி அசைகிறான். 12785


திருவாரூர்த் தேர் அழகு; திருவிடைமருதூர்த் தெரு அழகு; மன்னார்குடி மதிலழகு; வேதாரண்யம் விளக்கு அழகு; கும்பகோணம் கோயில் அழகு.

திருவாரூர்த் தேர் ஓட்டம்; திரும்பிப் பார்த்தால் நாய் ஓட்டம்.

திருவாரூர்த் தேருக்கு உலுக்கு மரம் போடுகிறது போல.

திருவாழ்த்தான் இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான்.

திருவாழ்த்தான் குதிரை வளர்த்தது போல. 12790


திருவாழ்த்தான் செத்தானாம்; அந்தப் பழி உன்னை விட்டுப் போகாதாம்.

திருவாழ்த்தான் திருவரங்கப் பொடி விற்றது போல,

திருவிடை மருதூர்த் தெரு அழகு.

திருவிழாப் பார்க்க வந்தவன் கழுத்தில் தவிலைக் கட்டி அடித்தது போல.

திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும்; நெய் வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும். 12795


திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் காக்கும்.

(அளித்திடும்.)

திருவிளக்கு இட்டால் தீவினை தீரும்.

திருவிளக்கு இல்லா வீட்டில் பேய் குடியிருக்கும்.

திருவிளக்கு இல்லா வீடு போல.

திருவேங்கடத்தான் குடியைக் கெடுத்தான். 12800