தமிழ்ப் பழமொழிகள்
73
திருவாசல் ஆண்டியும் ஒரு வேலைக்கு உதவுவான்.
திருவாதரப்பட்ட குருக்களே தண்டம்; கரியாய்ப் போன சீஷனே கொண்டேன்.
திருவாதிரை ஒரு வாய்க் களி; திருப்பிக் கேட்டால் செருப்பால் அடி.
திருவாதிரை ஒரு வாய்க் களி; திருவாய் திறந்து ஒரு வாக்களிக்கும். 12780
திருவாதிரைக் களி தினமும் அகப்படுமா?
திருவாதிரை மழை இல்லாவிடில் திருப்பி மழை காண்பது அரிது.
திருவாதிரையில் போன பொருள் திரும்பி வருகிறது கண்டிப்பு.
திருவாரூர்த் தெரு அழகு; திருவொற்றியூர்த் தேர் அழகு.
திருவாரூர்த் தேர் அசைகிறமாதிரி அசைகிறான். 12785
திருவாரூர்த் தேர் அழகு; திருவிடைமருதூர்த் தெரு அழகு; மன்னார்குடி மதிலழகு; வேதாரண்யம் விளக்கு அழகு; கும்பகோணம் கோயில் அழகு.
திருவாரூர்த் தேர் ஓட்டம்; திரும்பிப் பார்த்தால் நாய் ஓட்டம்.
திருவாரூர்த் தேருக்கு உலுக்கு மரம் போடுகிறது போல.
திருவாழ்த்தான் இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான்.
திருவாழ்த்தான் குதிரை வளர்த்தது போல. 12790
திருவாழ்த்தான் செத்தானாம்; அந்தப் பழி உன்னை விட்டுப் போகாதாம்.
திருவாழ்த்தான் திருவரங்கப் பொடி விற்றது போல,
திருவிடை மருதூர்த் தெரு அழகு.
திருவிழாப் பார்க்க வந்தவன் கழுத்தில் தவிலைக் கட்டி அடித்தது போல.
திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும்; நெய் வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும். 12795
திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் காக்கும்.
- (அளித்திடும்.)
திருவிளக்கு இட்டால் தீவினை தீரும்.
திருவிளக்கு இல்லா வீட்டில் பேய் குடியிருக்கும்.
திருவிளக்கு இல்லா வீடு போல.
திருவேங்கடத்தான் குடியைக் கெடுத்தான். 12800