பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தமிழ்ப் பழமொழிகள்



திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

தில்லும் பில்லும் திருவாதிரமும்.

தில்லும் மல்லும் அல்லல்.

தில்லை அந்தணர் கூடுவது எப்போது? ஓடுவது எப்போது?

தில்லைக் காளி எல்லைக்கு அப்பால். 12805


தில்லைக்குத் தீக்ஷிதன்; இலங்கைக்கு ராக்ஷதன்.

தில்லைக்கு வழி எது என்றால் சிவப்புக் காளை முப்பது பணம் என்றது போல.

தில்லைத் தீக்ஷிதனோ; இலங்கை ராக்ஷதனோ?

தில்லைப் பெண் எல்லை விட்டுப் போகாள்.

தில்லை பாதி, திருவாசகம் பாதி. 12810


தில்லை மூவாயிரம்; கடந்தை ஆறாயிரம்.

தில்லை மூவாயிரம்; செந்தில் ஆறாயிரம்.

தில்லை மூவாயிரம்; நாங்கூர் நாலாயிரம்.

திவசமோ, திப்பிசமோ?

திறந்த கதவுக்குத் திறவுகோல் தேடுவானேன்? 12815


திறந்த வீட்டில் நாய் நுழைகிற மாதிரி.

திறந்த வீடு செல்லாத்தாள் கோவில் போல இருக்கிறது.

தின்றவன் தின்னத் திருப்பாத்தான் தண்டம் கொடுத்தாற் போல.

தின்றதைத் தின்னும் தேவாங்கு போல் இருக்கிறான்.

தின்பதும் கொஞ்சம்; ஜீவனும் இல்லை. 12820

(ஜீவநிலை இல்லை.)


தின்ற சோறு உடம்பிலே ஒட்டவில்லை.

தின்றது செரிக்கத் திண்ணைமேல் ஏறிக் குதிக்க.

தின்ற நஞ்சு கொல்லுமா? தின்னா நஞ்சு கொல்லுமா?

தின்ற மண்ணுக்குத் தக்க சோகை.

தின்ற மதம் கண்ணைக் கெடுக்கும். 12825


தின்றவன் தின்னக் கோம்பை; சூப்பினவன்மேல் தண்டம்.

(யாழ்ப்பாண வழக்கு.)