பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

75


தின்றால் கொல்லுமோ, கண்டால் கொல்லுமோ, விஷம்?

தின்று உமிழ்ந்த தம்பலத்தைத் தின்ன நினைப்பார்களா?

(தாம்பூலத்தைத் திரும்பத் தின்ன.)

தின்று கொழுத்தால் சும்மா இருக்க ஒட்டாது.

தின்று மிகுந்த பாக்கைத் திரும்பவும் போடுவார்களா? 12830


தின்று ருசி கண்டவன் திண்ணைவிட்டுப் போகான்; பெண்டு ருசி கண்டவன் பின்னையும் போகான்.

தின்னத் தவிடு இல்லை; தங்கச் சரப்பளி தொங்கத் தொங்க ஆடுகிறதாம்.

தின்னத் தின்ன ஆசை; துடைப்பக்கட்டைப் பூசை.

தின்னத் தின்னக் கேட்குமாம் பிள்ளை பெற்ற வயிறு.

தின்னத் தெரியாமல் தின்பானேன்? 12835


தின்னத் தெரியாமல் தின்று பேளத் தெரியாமல் பேளுகிறது.

தின்னப் பொசிப்பு உள்ளவனுக்குத் திண்ணைக் கட்டிலே தேன்.

(யாழ்ப்பாண வழக்கு.)

தின்ன வந்த பிடாரி தெருப் பிடாரியைத் துரத்திற்றாம்.

தின்ன வயிற்றுக்குச் சோறும் மொட்டைத் தலைக்கு எண்ணெயும,

தின்ன வேண்டாம்; உண்ண வேண்டாம்; மகளே, மூஞ்சியாவது கழுவிப் பொட்டு வைத்துக் கொண்டு போ. 12840


தின்னா வீட்டில் தின்னி.

தினம் தவநிலையில் மனசை நிறுத்து.

தினவு எடுத்தவன்தான் சொறிந்து கொள்வான்.

தினவுக்குச் சொறிதல் இதம்.

தினை அளவு செய்தாருக்கும் பனை அளவு செய்.

தினை அறுக்கச் சென்ற இடத்தில் பனை முளைத்தது போல. 12845


தினை நன்றி செய்தால் பனையாகத் தோன்றும்.

தினைப் பயிறும் பாலும் தின்னாதிருந்தும் வினைப்பயனை வெல்வது அரிது.

தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.