பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

து


துக்கத்தை எல்லாம் விட்டுவிட்டுத் தொட்டிச்சியைக் குத்தகையாக வைத்துக் கொண்டானாம்.

துக்கத்தைச் சொல்லி ஆற்ற வேண்டும்; கட்டியைக் கீறி ஆற்ற வேண்டும்.

துக்கப்பட்டவருக்கு வெட்கம் இல்லை.

துக்கம் அற்றவனுக்குச் சொக்கட்டான். 12900


துக்கம் உள்ள மனசுக்குத் துன்பம் ஏன் வேறே?

துக்கலூரிலும் கல்யாணம்; துடியலூரிலும் கல்யாணம்; நாய் அங்கு ஓடியும் கெட்டது; இங்கு ஓடியும் கெட்டது.

துக்கிரிக்குத் துடையிலே மச்சம்.

துக்குணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை.

(கோழி.)

துக்குணிச் சொகன். 12905

(சொக்கணை.)


துஞ்சி நின்றான்; மிஞ்சி உண்ணான்.

துட்டுக்கு இரண்டு; துக்காணிக்கு மூன்று.

துட்டுக்கு எட்டுக் குட்டி ஆனாலும் துலுக்கக் குட்டி உதவாது.

(என்றாலும்.)

துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கிச் சட்டி எட்டுத் துட்டுக்கு விற்றாலும் வட்டிக்கு ஈடு ஆகாது.

(அல்ல.)

துட்டுக்கு ஒரு சேலை விற்றாலும் நாய் பிட்டம் அம்பலம். 12910


துட்டுக்கு ஒரு பிள்ளை கொடுத்தாலும் துலுக்கப் பிள்ளை கூடாது.

துட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ? திட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ?

துட்டைக் கொடுத்துத் துக்கத்தை வாங்கிக் கொண்டாளாம்.

துடிக்கக் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறது.

துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. 12915