பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தமிழ்ப் பழமொழிகள்



துணைக்குத் துணையும் ஆச்சு: தொண்டைக் குழிக்கு வினையும் ஆச்சு.

துணைப்பட்டால் சாக வேணும்; பிணைப்பட்டால் இருக்க வேணும்,

(பட்டால்.)

துணை பெற்றவன் வீண் போகான்.

துணை போய் இரு; பொங்கினதைத் தேடு.

துணை போனாலும் வினை போகாதே. 12945


துணையோடு அல்லது நெடுவழி போகேல்.

(போகாதே.)

துப்பட்டியில் கிழித்த கோவணந்தானே?

துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தாற் போல.

துப்பு அற்ற நாரிக்குக் கொம்பு அழகைப் பார்.

துப்பு அற்ற புருஷனுக்குத் துறுதுறுத்த பெண்டாட்டி. 12950


துப்பு அற்றவனை உப்பிலே பார்; சீர் அற்றவனை நீரிலே பார்.

துப்புக் கெட்ட சாம்பானுக்கு இரட்டைப் படித்தரம், தூர்ந்த கிணற்றுக்கு இரட்டை ஏற்றம்.

துப்புக் கெட்ட நாய்க்கு இரட்டைப் பங்கு.

(பயலுக்கு.)

துப்புக் கெட்ட மாப்பிள்ளைக்கு இரட்டைப் பெண்டாட்டி.

துப்புக் கெட்டவனுக்கு இரட்டைப் பங்கு. 12955


துப்புக் கெட்டவளுக்கு இரட்டைப் பரிசமா?

(பரியம்.)

தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

தும்பைத் தறித்து வாலைப் பிடிப்பது போல.

தும்பை விட்டுப் பிடிக்க வேண்டும்.

தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே. 12960

(பிடிப்பது போல.)


தும்மல் நன்னிமித்தம்,

தும்மினால் குற்றம், இருமினால் அபராதம்.

தும்பினால் மூக்கு அறுந்து போகிறதே!

தும்பினும் குற்றம்; ஒழியினும் குற்றம்.

தும்முகிற போது போகிற மூக்கா? 12965


துயரப்பட்டால் ஆறுதல் உண்டு; துன்பப் பட்டால் தேறுதல் உண்டு.

துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்.