80
தமிழ்ப் பழமொழிகள்
துணைக்குத் துணையும் ஆச்சு: தொண்டைக் குழிக்கு வினையும் ஆச்சு.
துணைப்பட்டால் சாக வேணும்; பிணைப்பட்டால் இருக்க வேணும்,
- (பட்டால்.)
துணை பெற்றவன் வீண் போகான்.
துணை போய் இரு; பொங்கினதைத் தேடு.
துணை போனாலும் வினை போகாதே. 12945
துணையோடு அல்லது நெடுவழி போகேல்.
- (போகாதே.)
துப்பட்டியில் கிழித்த கோவணந்தானே?
துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தாற் போல.
துப்பு அற்ற நாரிக்குக் கொம்பு அழகைப் பார்.
துப்பு அற்ற புருஷனுக்குத் துறுதுறுத்த பெண்டாட்டி. 12950
துப்பு அற்றவனை உப்பிலே பார்; சீர் அற்றவனை நீரிலே பார்.
துப்புக் கெட்ட சாம்பானுக்கு இரட்டைப் படித்தரம், தூர்ந்த கிணற்றுக்கு இரட்டை ஏற்றம்.
துப்புக் கெட்ட நாய்க்கு இரட்டைப் பங்கு.
- (பயலுக்கு.)
துப்புக் கெட்ட மாப்பிள்ளைக்கு இரட்டைப் பெண்டாட்டி.
துப்புக் கெட்டவனுக்கு இரட்டைப் பங்கு. 12955
துப்புக் கெட்டவளுக்கு இரட்டைப் பரிசமா?
- (பரியம்.)
தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
தும்பைத் தறித்து வாலைப் பிடிப்பது போல.
தும்பை விட்டுப் பிடிக்க வேண்டும்.
தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே. 12960
- (பிடிப்பது போல.)
தும்மல் நன்னிமித்தம்,
தும்மினால் குற்றம், இருமினால் அபராதம்.
தும்பினால் மூக்கு அறுந்து போகிறதே!
தும்பினும் குற்றம்; ஒழியினும் குற்றம்.
தும்முகிற போது போகிற மூக்கா? 12965
துயரப்பட்டால் ஆறுதல் உண்டு; துன்பப் பட்டால் தேறுதல் உண்டு.
துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்.