பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

83


துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.

துள்ளும் மாள் துள்ளித் துரவில் விழுந்தது.

துள்ளு மறி கொலை அறியாது.

துளசிக்கு வாசனையும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிற போதே உண்டு.

(தெரியும்)

துளி என்றால் நீர்த்துளி. 13025


துற்றிச் சமுத்திரம் பொங்கினால் கொள்ளுமாம் கிணறு அநேகம்.

(துள்ளிச் சமுத்திரம்.)

துறக்கத் துறக்க ஆனந்தம்; துறந்தபின் பேரின்பம்.

துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா?

(வாய்க்கு எட்டுமா.)

துறவறம் இல்லறம் மனசிலே.

துறவறமும் பழிப்பு இன்றேல் எழிலதாகும். 13030

(தண்டலையார் சதகம்.)


துறவிக்கு வேந்தன் துரும்பு.

துறுதுறத்த வாலு, துக்காணிக்கு நாலு.

துன்பத்திற்கு இடம் கொடேல்.

துன்பத்தின் முடிவு இன்பம்.

துன்பம் உற்றவர்க்கு இன்பம் உண்டு. 13035


துன்பம் தருகிற காக்கையின் சத்தத்தால் அதை விரட்டுவார்கள்; இன்பம் தருகிற குயிலை விரட்டார்கள்.

துன்பம் தொடர்ந்து வரும்.

துன்பம் முந்தி; இன்பம் பிந்தி.

துஷ்ட சகவாசம் பிராண சங்கடம்.

துஷ்ட சதுஷ்டயம். 13040

(பாரதம்.)


துஷ்ட நிக்ரகம், சிஷ்ட பரிபாலனம்.

துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்.

துஷ்டர் நேசம் பிராண நஷ்டம்.

துஷ்டருடன் சேருவதைவிடத் தனியே இருப்பது மேலானது.

துஷ்டரைக் கண்டால் தூர விலகு; கெட்டாரைக் கண்டால் காறி உமிழ். 13045


துஷ்டனைக் கண்டால் எட்டி நில்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

(ஓடு.)