தமிழ்ப் பழமொழிகள்
83
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
துள்ளும் மாள் துள்ளித் துரவில் விழுந்தது.
துள்ளு மறி கொலை அறியாது.
துளசிக்கு வாசனையும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிற போதே உண்டு.
- (தெரியும்)
துளி என்றால் நீர்த்துளி. 13025
துற்றிச் சமுத்திரம் பொங்கினால் கொள்ளுமாம் கிணறு அநேகம்.
- (துள்ளிச் சமுத்திரம்.)
துறக்கத் துறக்க ஆனந்தம்; துறந்தபின் பேரின்பம்.
துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா?
- (வாய்க்கு எட்டுமா.)
துறவறம் இல்லறம் மனசிலே.
துறவறமும் பழிப்பு இன்றேல் எழிலதாகும். 13030
- (தண்டலையார் சதகம்.)
துறவிக்கு வேந்தன் துரும்பு.
துறுதுறத்த வாலு, துக்காணிக்கு நாலு.
துன்பத்திற்கு இடம் கொடேல்.
துன்பத்தின் முடிவு இன்பம்.
துன்பம் உற்றவர்க்கு இன்பம் உண்டு. 13035
துன்பம் தருகிற காக்கையின் சத்தத்தால் அதை விரட்டுவார்கள்;
இன்பம் தருகிற குயிலை விரட்டார்கள்.
துன்பம் தொடர்ந்து வரும்.
துன்பம் முந்தி; இன்பம் பிந்தி.
துஷ்ட சகவாசம் பிராண சங்கடம்.
துஷ்ட சதுஷ்டயம். 13040
- (பாரதம்.)
துஷ்ட நிக்ரகம், சிஷ்ட பரிபாலனம்.
துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்.
துஷ்டர் நேசம் பிராண நஷ்டம்.
துஷ்டருடன் சேருவதைவிடத் தனியே இருப்பது மேலானது.
துஷ்டரைக் கண்டால் தூர விலகு; கெட்டாரைக் கண்டால் காறி உமிழ். 13045
துஷ்டனைக் கண்டால் எட்டி நில்.
துஷ்டனைக் கண்டால் தூர விலகு.
- (ஓடு.)