84
தூக்கணத்துக்குத் துயரம் இல்லை; மூக்கணத்துக்கு முசு இல்லை.
- (மூக்கணம்-மூக்ணாங்கயிறு போட்ட எருது.)
தூக்கணாங்குருவி குரங்குக்குப் புத்தி சொன்னது போல.
தூக்க நினைத்து நோக்கிப் பேசு. 13050
தூக்கி ஏற விட்டு ஏணியை வாங்கும் தூர்த்தர் சொல்லைக் கேளாதே.
- (ஏணியை எடுக்கும்.)
தூக்கி நிறுத்தடா, பிணக்காடாய் வெட்டுகிறேன் என்றாளாம்.
தூக்கி நினைத்து நோக்கிப் பேசு.
தூக்கிப் போட்டதும் அல்லாமல் குதிரை தோண்டிக் குழிப் பறித்ததாம்.
தூக்கி வளர்த்த பிள்ளையும் துடையில் வைத்துத் தைத்த இலையும் உருப்படா. 13055
தூக்கி வினை செய்.
தூக்கினால் சென்னி துணிக்கத் துணித்துவிடு; மாக்கினால் சக்கரம் போல அடை.
தூக்கு உண்டானால் நோக்கு உண்டு
தூங்காதவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனுக்கும் விளங்கும் குட்டி.
தூங்காதவனுக்குச் சுகம் இல்லை. 13060
தூங்காதவனே நீங்காதவன்.
தூங்கிய நாய்க்குத் துடைப்பம் எதிரி.
தூங்கினவன் கன்று கிடாக்கன்று.
- (கண்ணு.)
தூங்கினவன் கன்று சேங்கன்று.
தூங்கினவன் சாகிறதில்லை; வீங்கினவன் பிழைக்கிறதில்லை; 13065
தூங்கினவன் தொடையிலே கயிறு திரிக்கிறான்.
தூங்கினவன் தொடையிலே திரித்த வரைக்கும் லாபம்.