தமிழ்ப் பழமொழிகள்
89
தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா?
தெற்கே சாய்ந்தவன் தெரு எல்லாம் கூடை.
- (-பிறை)
தெற்கே சாய்ந்தால் தெருவெல்லாம் விலைப் பெட்டி; வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல். 13160
- (தைப்பிறை.)
தெற்கே போகிற நாய்க்கு வடக்கே வால்.
தெற்கே போன வெள்ளி வடக்கே வந்தால் மழை.
தெறிக்க அடித்த தட்டானைப் போல.
தென்காசி ஆசாரம்; திருநெல்வேலி உபசாரம்.
தென்காசி வழக்கா, பாதி போடு. 13165
தென் திசைப் புலையன் வட திசைக்கு ஏகின் நடை திருந்திப் பார்ப்பான் ஆவான்.
- (கபிலர் அகவல்.)
தென்றல் அடிக்கிற காற்றே, என் இறுக்கத்தை ஆற்றே.
தென்றல் திரும்பியும் மழையா?
தென்றல் முற்றிப் பெருங்காற்று ஆனது போல.
- (ஆச்சு.)
தென்றல் முற்றானால் புயலாக மாறும். 13170
தென்றலும் வாடையும் இறக்கும் பயிர்கள்.
தென்னங் குரும்பை திருக்குரும்பை, பன்னாடை எல்லாம், ஒரு மரத்துக் காய்.
தென்னந்தோப்பில் குரங்கு வளர்த்தது போல.
தென்னமரத்தில் ஏண்டா ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க என்றானாம்; தென்னமரத்தில் புல் ஏதடா என்றால், அதுதான் கீழே இறங்குகிறேன் என்றான்.
தென்னமரத்தில் ஏறுபவனை எவ்வளவு தூரம் தூக்கிவிட முடியும்? 13175
தென்ன மரத்தில் தேள் கொட்டப் பன மரத்திலே பதவளை காட்டினது போல.
தென்ன மரத்தில் தேள் கொட்டிப் பனமரத்தில் நெறி ஏறிற்றாம்.
- (புன்னை மரத்தில்.)
தென்ன மரத்தில் பாதி, என்னை வளர்த்தாள் பாவி.