பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தமிழ்ப் பழமொழிகள்




தென்ன மரத்திற்குத் தண்ணீர் வார்த்தால் தலையாலே தரும்.

(ஊற்றினால்.)

தென்ன மரத்தின் நிழலும் தேவடியாள் உறவும் ஒன்று. 13180


தென்ன மரத்துக் குரங்கே, என்னைப் பார்த்து இறங்கே.

தென்னாலிராமன் குதிரை வளர்த்தது போல.

தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.

தென்னாலிராமன் போட்ட சித்திரம் போல.

தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும். 13185


தென்னையிலே தேள் கொட்டித் திருவையாற்றுக்கு நெறி கட்டியதாம்.

தென்னையிலே பாதி என்னை வளர்த்தாள் பாவி.

தென்னை வைத்து வாழை ஆச்சு; வாழை வைத்து மஞ்சள் ஆச்சு மஞ்சள் வைத்து முள்ளி ஆச்சு.