பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91


தே


தேகம் அநித்தியம்; தெய்வம் துணைக் கொள்.

தேகம் சந்தேகம். 13190


தேங்காய் ஆடும்; இளநீர் ஆடும்; திருவுமணையில் தூக்கமா? தேங்காய்க்குள் நீர் போல.

தேங்காய்க்கு மூன்று கண்; எனக்கு ஒரு கண்.

தேங்காய் தின்றவன் ஒருத்தன்; தண்டம் கொடுத்தவன் ஒருத்தன்.

தேங்காய் தின்னலாம், இளநீர் குடிக்கலாம்; திருவு பலகையிலே வந்ததோ தூக்கம்? 13195


தேங்காயிற் சிறிது; மாங்காயிற் பெரிது.

தேங்காயை உடைத்தால், சிரட்டையை உடைக்கிறேன்.

தேங்காயை உடைத்தாற்போல் பேசுகிறான்.

தேங்காயைத் தின்றவன் தின்னக் கோம்பை சூப்பினவன் தண்டம் இறுக்கிறதா?

(சப்பினவன்.)

தேங்காயை விழுங்குகிறது தினை; பருவத்தை விழுங்குகிறது பனை. 13200


தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு,

(ஆசாரம் வேறு.)

தேசத்து நன்மை தீமை அரசர்க்கு இல்லையா?

தேசத்தோடு ஒத்து வாழ்.

தேச பத்தியே தெய்வ பத்தியாம்.

தேசம் எல்லாம் பறக்கும் காகம் தான் இருக்கும் கொம்பை அறியாது. 13205


தேடக் கிடையாது; தேட என்றால் கிட்டாது. திருப்கொட்பா, திருப்பிக் கொடு.

தேடத்தசை இருந்தும் அனுபவிக்க அதிர்ஷ்டம் இல்லை.

தேட நினைப்பது தெய்வத்தை.