பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

93


தேர் செய்கிற தச்சனுக்கு அகப்பை போடத் தெரியவில்லை.

தேர் தாழ்ந்து தில்லை உயர்ந்தது; ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது.

தேர் தெருத் தெருவாக ஓடினாலும் தன் நிலையில்தான் நிற்கும்.

தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால்.

தேர் வேந்தன் தன் களத்தில் சிலர் வெல்லச் சிலர் தோற்பர்; ஏர் வேந்தன் களத்தில் இரப்பவரும் தோலாரே. 13240


தேராச் செய்கை தீராச் சஞ்சலம்.

தேருக்கு உள்ள சிங்காரம் தெரு எல்லாம் கிடக்கிறது.

தேருக்குப் போகிறபோது தெம்பு; திரும்பி வருகிறபோது வம்பு,

தேருக்குள் சிங்காரம், தெரு எல்லாம் அலங்காரம்.

தேரைகள் பாம்பைத் திரண்டு வளைத்தாற் போல. 13245


தேரை மோந்த தேங்காய் போல.

தேரோடு திருநாள் ஆயிற்று; தாயோடு பிறந்தகம் போயிற்று.

தேரோடு திருநாள் போம்.

தேரோடு நின்று தெருவோடு அலைகிறான்.

(தேரோடு மாலையாகத் தெருவோடு.)

தேவடியாள் இருந்து ஆத்தாள் செத்தால் கொட்டு முழக்கு; தேவடியாள் செத்தால் ஒன்றும் இல்லை. 13250


தேவடியாள் சிந்தாக்கு உள்ள வரையில் நட்டுவனுக்குப் பஞ்சம் இல்லை.

(சிந்தாக்கு - பொட்டு.)

தேவடியாள் குடியில் குமரிப் பெண்ணை ஈடு வைக்கலாமா?

தேவடியாள் சிங்காரிக்கும் முன்னே தேர் ஓடி நிலையில் நின்றது.

(தெருவில்.)

தேவடியாள் செத்தால் பிணம்; தேவடியாள் தாய் செத்தால் மணம்.

தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா? 13255


தேவடியாள் மகன் திவசம் செய்தது போல.

தேவடியாள் மகனுக்கும் திவசம்.

தேவடியாள் மலம் எடுத்தாற் போல.

(பொட்டு எடுத்தாற் போல.)

தேவடியாள் மூக்கில் மூக்குத்தி கிடந்தால் நட்டுவக்காரன் பட்டினி கிடப்பான்.

தேவடியாள் வீட்டில் ஆண் பிள்ளை பிறந்தாற் போல. 13260