தமிழ்ப் பழமொழிகள்
93
தேர் செய்கிற தச்சனுக்கு அகப்பை போடத் தெரியவில்லை.
தேர் தாழ்ந்து தில்லை உயர்ந்தது; ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது.
தேர் தெருத் தெருவாக ஓடினாலும் தன் நிலையில்தான் நிற்கும்.
தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால்.
தேர் வேந்தன் தன் களத்தில் சிலர் வெல்லச் சிலர் தோற்பர்; ஏர் வேந்தன் களத்தில் இரப்பவரும் தோலாரே. 13240
தேராச் செய்கை தீராச் சஞ்சலம்.
தேருக்கு உள்ள சிங்காரம் தெரு எல்லாம் கிடக்கிறது.
தேருக்குப் போகிறபோது தெம்பு; திரும்பி வருகிறபோது வம்பு,
தேருக்குள் சிங்காரம், தெரு எல்லாம் அலங்காரம்.
தேரைகள் பாம்பைத் திரண்டு வளைத்தாற் போல. 13245
தேரை மோந்த தேங்காய் போல.
தேரோடு திருநாள் ஆயிற்று; தாயோடு பிறந்தகம் போயிற்று.
தேரோடு திருநாள் போம்.
தேரோடு நின்று தெருவோடு அலைகிறான்.
- (தேரோடு மாலையாகத் தெருவோடு.)
தேவடியாள் இருந்து ஆத்தாள் செத்தால் கொட்டு முழக்கு; தேவடியாள் செத்தால் ஒன்றும் இல்லை. 13250
தேவடியாள் சிந்தாக்கு உள்ள வரையில் நட்டுவனுக்குப் பஞ்சம்
இல்லை.
- (சிந்தாக்கு - பொட்டு.)
தேவடியாள் குடியில் குமரிப் பெண்ணை ஈடு வைக்கலாமா?
தேவடியாள் சிங்காரிக்கும் முன்னே தேர் ஓடி நிலையில் நின்றது.
- (தெருவில்.)
தேவடியாள் செத்தால் பிணம்; தேவடியாள் தாய் செத்தால் மணம்.
தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா? 13255
தேவடியாள் மகன் திவசம் செய்தது போல.
தேவடியாள் மகனுக்கும் திவசம்.
தேவடியாள் மலம் எடுத்தாற் போல.
- (பொட்டு எடுத்தாற் போல.)
தேவடியாள் மூக்கில் மூக்குத்தி கிடந்தால் நட்டுவக்காரன் பட்டினி கிடப்பான்.
தேவடியாள் வீட்டில் ஆண் பிள்ளை பிறந்தாற் போல. 13260