பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தமிழ்ப் பழமொழிகள்


தேவடியாள் வீட்டில் பெண்குழந்தை பிறந்தாற் போல.

தேவடியாள் வீடு போவது போல.

தேவடியாளுக்குத் தினமும் ஒரு கணவன்.

தேவர் உடைமை தேவருக்கே.

தேவர்கள் பணிவிடை சேப்பு மேலவன் கர்த்தா. 13265


தேவரீர் சித்தம்; என் பாக்கியம்.

தேவரே தின்றாலும் வேம்பு கைக்கும்.

(பழமொழி நானூறு.)

தேவரைக் காட்டிலும் பூதம் பணி கொள்ளும்.

தேவலோகத்து அமிர்தத்தை ஈ மொய்த்த கதை.

தேவாமிர்தத்தை நாய் இச்சித்த கதை. 13270


தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?

தேள் கொட்டிய நாய் போல்.

தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்டவனையே கொட்டும்.

தேளுக்குக் கொடுக்கில் விடம்; உனக்கு உடம்பெல்லாம் விடம்.

தேளுக்குக் கொடுக்கில் விடம், தீயவருக்கு நாவில் விடம். 13275


தேளுக்குக் கொடுக்கில் விடம்; தேவடியாளுக்கு உடம்பு எங்கும் விடம்; துஷ்டனுக்குச் சர்வாங்கமும் விடம்.

(தேவடியாளுக்கு இடுப்பில் விடம்.)

தேளுக்கு மணியம் கொடுத்தால் நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டும்.

(ஜாமத்துக்கு ஜாமம் பத்துத்தரம் கொட்டும்.)

தேளோடு போனாலும் தெலுங்கனோடு போகாதே.

தேற்றிக் கழுத்து அறுக்கிறது.

தேற்றினும் மகப் பிரிவு தேற்றல் ஆகாது. 13280


தேன் உண்டானால் ஈத் தேடி வரும்.

தேன் உள்ள இடத்தில ஈ மொய்க்கும்.

தேள் எடுத்தவரைத் தண்டிக்குமா தேனீ?

தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?

(தேனை அழித்தவன்.)

தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு; மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு. 13285


தேன் ஒழுகப் பேசித் தெருக்கடக்க வழிவிடுவான்.

(தெருவிலே விடுவான், தெரு வழியே விடுகிறது.)