பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தமிழ்ப் பழமொழிகள்



வஞ்சகர் உறவை வழுவி விலகு.

வஞ்சகருக்கு என்ன நேசம் காட்டினாலும் நெஞ்சில் தேசம் கொள்ளார். 19465

(வாஞ்சை காட்டினாலும்.)


வஞ்சகருக்குப் பால் ஊட்டினாலும் தஞ்சாய் விடும்.

(பாலமுதும் நஞ்சு.)

வஞ்சனைக்கு முதற் பாதம்.

வஞ்சனை நெஞ்சை அடைக்கும்.

வஞ்சனை நெஞ்சைப் பிளக்கும்.

(வஞ்சகம்.)

வஞ்சனை வாழ்வைக் கெடுக்கும். 19470


வஞ்சித்து நெடுங்காலம் வாழ்தலினும் மரணம் அடைதலே நலம்.

வட்டம் சுற்றியும் வழிக்கு வரவேண்டும்.

வட்டம் சுற்றி வழியே வா.

வட்டி ஆசை முதலுக்குக் கேடு.

வட்டி ஆசை முதலைக் கெடுத்தது. 19475


வட்டி ஓட்டம் வாத ஓட்டத்திலும் அதிகம்.

(விழா ஓட்டத்திலும்.)

வட்டிக் காசு வாங்குகிற வடமலையானுக்குக் குட்டிக் கோவிந்தம்.

(வடமலையப்பனுக்கு.)

வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழந்தான்.

வட்டிக்குக் கொடுத்த பணம் வாய்க்கரிசிக்கு உதவாது.

வட்டிக்கு வட்டி எதிர் வட்டியா? 19480


வட்டி குட்டி போடும்.

வட்டி தூங்காது.

வட்டியும் முதலும் கண்டால் செட்டியார் சிரிக்காரா?

(சிரிப்பபார் கொண்டால்.)

வட்டியை நம்பி முதலை இழப்பரோ?

வட்டிலுக்கு வழி வாய் வைத்த இடம். 19485


வட்டிலை வைத்து வறுக்கச் சொன்ன கதை.

வட்டி வாங்குகிற வடக்கு மலையாலுக்குக் கோவிந்தம் போட்டா கோவிந்தா.

வட்டிற் சோற்றைப் பங்கு இட்டாலும் வாழ்வைப் பங்கிட மாட்டார்கள்.

வட்டுக் கோட்டைக்குப் போக வழி எது என்றால், துட்டுக்கு