தமிழ்ப் பழமொழிகள்
117
வண்ணான் வீட்டுக்குப் போகப் போகப் போகிறது.
வண்ணான் வீட்டு நாய் வீட்டுக்கும் உதவாது; துறைக்கும் உதவாது.
வண்ணான் வெள்ளாவித் துணியிலே நாய் ஏறின மாதிரி.
வண்ணானிடம் துணி போட்டுக் கொக்குக்குப் பின்னே திரிந்தது போல்.
வண்ணானுக்கு உழைத்த கழுதையும் வாணியனுக்கு உழைத்த காளையும் சரி. 19535
வண்ணானுக்கு நோய் வந்தால் கல்லோடே.
வண்ணானுக்குப் போனான; வண்ணாத்திக்கு வந்தான்.
வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவு ஏன்?
வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை;வண்ணாத்திக்குக் கழுதை மேல்ஆசை.
வண்ணானுக்கு வந்ததும் இல்லை; செம்மானுக்குப் போனதும் இல்லை. 19540
வண்ணானோடு போய் மோழி சுமந்தாளாம்.
வணங்கா முடியால் கேடு வரும்.
வணங்கின காலில் முள் தைக்காது.
வணங்கின புல் பிழைக்கும்.
வணங்கின முள் தைக்காது. 19545
வணங்கின முள் தைக்குமா? வணங்காத புல்லுத் தைக்குமா?
வணங்கின வில் தீங்கை விளைக்கும்.
வணங்கின வில் தைக்கும்; வணங்காத வில் தைக்காது.
வணிகர்க்கு அழகு வாணிகம் செய்தல்.
வத்திரம் உடையான் அவைக் கஞ்சான்; வாகனம் உடையான் நடைக்கு அஞ்சான். 19550
வத்தி வைக்கிறான்.
வதுவை செய்து வாழ்.
வந்த அளவிலே சிறுக்கி பந்து அடித்தாள்; வரவரச் சிறுக்கிச் சோர்ந்து போனாள்.
வந்த காசுக்கு வட்டம் இல்லை.