பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

119


வந்தவனுக்குச் சோறு; வராதவனுக்கு உலை வைக்கிறது.

வந்த விதி வந்தால் வாய் திறக்க வழி இல்லை.

வந்த வினை எல்லாம் வரட்டும்.

வந்த வினை போகாது; வராத வினை வாராது. 19580


வந்தவுடன் மாமியார் பந்து அடித்தாள்; வர வர மாமியார் கழுதைபோல் ஆனாள்.

வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தைத் தள்ளினது.

(இருந்த தண்ணீரைக் கொண்டு போயிற்று.)

வந்த வேலையை விட்டு விட்டுப் பந்தற்காலைப் பிடித்தானாம்.

வந்தார் இறங்குமிடம் வழி வந்தார் தங்கும் இடம்.

வந்தாரை வாழ வைக்கும்; மண்ணில் பிறந்தாரைத் தூங்க வைக்கும். 19585

வந்தால் விரவில்லை; வராவிட்டால் செலவில்லை.

வந்தாலும் சரி, போனாலும் சரி.

வந்தாற் போல் மாமியார் பந்தடித்தாள்; வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்; ஊர் கிட்டே வரும்போது ஊளையிட்டுக் கொண்டே வந்தாள்.

வந்தாற் போலச் சிறுக்கி பந்து அடித்தாள்; வரவரச் சிறுக்கி நொந்து போனாள்.

வந்தாற் போல மாமி பந்து அடித்தாள்; வரவர மாமி கழுதை மேய்கிறாள். 19590


வந்து போகிற புருஷனும் வைத்து உடுத்துகிற புடைவையும் வகையாக அகப்பட்டன.

வம்சத்து வாடிக்கைக்கு ஒரு குருவைப் பொங்கல் இட்டாலும் போகாது.

வம்ச பரம்பரையாய் வந்தீரே சிற்றப்பா, உங்கள் உத்தரீயத்தைத் தாரும்; உடுத்துக் கொண்டு தண்டன் இடுகிறேன்.

வம்சம் வார்த்தைக்கு அஞ்சும்; புழுக்கை உதைக்கு அஞ்சும்.

(உலக்கைக்கு.)

வம்பனுககு வழி எங்கே? போகிறவன் தலை மேலே. 19595


வம்பான வார்த்தை மனசுக்கு அருவகுப்பு.

வம்பி இருந்த மனை பாழ்; தும்பி இருந்த தூன் பாழ்; அறந்தாங்கித் தம்பியிருந்த தரை பாழ்.

வம்பி மகள் மழலை வார்த்தை கேட்டு, ஆடிவரைத் தம்பி என்று அழைக்கத் தலைப்பட்டாள்.