தமிழ்ப் பழமொழிகள்
119
வந்தவனுக்குச் சோறு; வராதவனுக்கு உலை வைக்கிறது.
வந்த விதி வந்தால் வாய் திறக்க வழி இல்லை.
வந்த வினை எல்லாம் வரட்டும்.
வந்த வினை போகாது; வராத வினை வாராது. 19580
வந்தவுடன் மாமியார் பந்து அடித்தாள்; வர வர மாமியார் கழுதைபோல் ஆனாள்.
வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தைத் தள்ளினது.
வந்த வேலையை விட்டு விட்டுப் பந்தற்காலைப் பிடித்தானாம்.
வந்தார் இறங்குமிடம் வழி வந்தார் தங்கும் இடம்.
வந்தாரை வாழ வைக்கும்; மண்ணில் பிறந்தாரைத் தூங்க வைக்கும். 19585
வந்தால் விரவில்லை; வராவிட்டால் செலவில்லை.
வந்தாலும் சரி, போனாலும் சரி.
வந்தாற் போல் மாமியார் பந்தடித்தாள்; வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்; ஊர் கிட்டே வரும்போது ஊளையிட்டுக் கொண்டே வந்தாள்.
வந்தாற் போலச் சிறுக்கி பந்து அடித்தாள்; வரவரச் சிறுக்கி நொந்து போனாள்.
வந்தாற் போல மாமி பந்து அடித்தாள்; வரவர மாமி கழுதை மேய்கிறாள். 19590
வந்து போகிற புருஷனும் வைத்து உடுத்துகிற புடைவையும் வகையாக அகப்பட்டன.
வம்சத்து வாடிக்கைக்கு ஒரு குருவைப் பொங்கல் இட்டாலும் போகாது.
வம்ச பரம்பரையாய் வந்தீரே சிற்றப்பா, உங்கள் உத்தரீயத்தைத் தாரும்; உடுத்துக் கொண்டு தண்டன் இடுகிறேன்.
வம்சம் வார்த்தைக்கு அஞ்சும்; புழுக்கை உதைக்கு அஞ்சும்.
வம்பனுககு வழி எங்கே? போகிறவன் தலை மேலே. 19595
வம்பான வார்த்தை மனசுக்கு அருவகுப்பு.
வம்பி இருந்த மனை பாழ்; தும்பி இருந்த தூன் பாழ்; அறந்தாங்கித் தம்பியிருந்த தரை பாழ்.
வம்பி மகள் மழலை வார்த்தை கேட்டு, ஆடிவரைத் தம்பி என்று அழைக்கத் தலைப்பட்டாள்.