122
தமிழ்ப் புத்தகாலயம்
வயிற்றைக் கிழித்துப் பார்த்தால் வாரடையும் கிடையாத திரக்ஷர குக்ஷி. 19645
வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும் கண்கட்டு வித்தை என்றான்.
வயிற்றைப் பிடித்து நிழலில் இருந்தால் மலடிக்கு மசக்கை.
வயிற்றைப் பீறிக் காட்டினாலும் மகேந்திர ஜாலம் என்பார்.
வயிற்றைப் புரட்டுகிறது வரகரிசிச் சோறு; வாய் நீர் கொளுத்துகிறது கம்பங்கூழ்; பொறுக்கப் போக வில்லை புளியம் பூரசம்; என் பொன்னான பிறந்தகம் போய்வருகிறேன்.
வயிற்றைவிட்டுக் கழிந்தாலும் வீட்டை விட்டுக் கழியவில்லை. 19650
வயிறா? வண்ணாந்தாழியா?
வயிறு ஆரப் போஜனமும் அரை ஆரப் புடைவையும் இல்லை.
வயிறு எரிகிறவனிடம் வரம் கேட்கிறது போல.
வயிறு எரிய வழக்கு ஓரம் சொல்கிறதா?
வயிறு என்னைப் பார்க்கிறது. 19655
வயிறு கூழுக்கு அழுகிறதாம்; கொண்டை பூவுக்கு அழுகிறதாம்.
வயிறு நிறைந்தால் வாழ்வு விடியும்.
வயிறு நிரம்பினாலும் கண் நிரம்பாது.
வயிறு நிறைந்தால் பானை மூடான்.
வயிறு பசித்தால் வைத்த இடத்தைப் பார். 19660
வயிறு வண்ணான் சால் போல.
வரகு அடித்த கம்பை வரகின்மேல் வைத்துத்தான் கட்டுவர்.
வரகு கொல்லை உழப்போன கலப்பையா?
வரங்கன் பெற்றது குரங்கைக் கொல்லவா?
வரச்சே துண்டில் கயிற்றின் வழியா வந்தது; போகச்சே இரும்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு போயிற்று. 19665
வரதன் சேவையும் வேகவதி மணலும்.
வரப்பு உயர்ந்தால் நெல் உயரும்; நெல் உயர்ந்தால் சொல் உயரும்.