பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தமிழ்ப் புத்தகாலயம்



வயிற்றைக் கிழித்துப் பார்த்தால் வாரடையும் கிடையாத திரக்ஷர குக்ஷி. 19645


வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும் கண்கட்டு வித்தை என்றான்.

(என்பார்கள்.)

வயிற்றைப் பிடித்து நிழலில் இருந்தால் மலடிக்கு மசக்கை.

வயிற்றைப் பீறிக் காட்டினாலும் மகேந்திர ஜாலம் என்பார்.

வயிற்றைப் புரட்டுகிறது வரகரிசிச் சோறு; வாய் நீர் கொளுத்துகிறது கம்பங்கூழ்; பொறுக்கப் போக வில்லை புளியம் பூரசம்; என் பொன்னான பிறந்தகம் போய்வருகிறேன்.

வயிற்றைவிட்டுக் கழிந்தாலும் வீட்டை விட்டுக் கழியவில்லை. 19650

வயிறா? வண்ணாந்தாழியா?

வயிறு ஆரப் போஜனமும் அரை ஆரப் புடைவையும் இல்லை.

(வேண்டும்.)

வயிறு எரிகிறவனிடம் வரம் கேட்கிறது போல.

வயிறு எரிய வழக்கு ஓரம் சொல்கிறதா?

வயிறு என்னைப் பார்க்கிறது. 19655


வயிறு கூழுக்கு அழுகிறதாம்; கொண்டை பூவுக்கு அழுகிறதாம்.

வயிறு நிறைந்தால் வாழ்வு விடியும்.

வயிறு நிரம்பினாலும் கண் நிரம்பாது.

வயிறு நிறைந்தால் பானை மூடான்.

(நிரம்பினால்.)

வயிறு பசித்தால் வைத்த இடத்தைப் பார். 19660


வயிறு வண்ணான் சால் போல.

வரகு அடித்த கம்பை வரகின்மேல் வைத்துத்தான் கட்டுவர்.

(விறகு அடித்த... விறகின் மேல்.)

வரகு கொல்லை உழப்போன கலப்பையா?

வரங்கன் பெற்றது குரங்கைக் கொல்லவா?

வரச்சே துண்டில் கயிற்றின் வழியா வந்தது; போகச்சே இரும்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு போயிற்று. 19665


வரதன் சேவையும் வேகவதி மணலும்.

( : வேகவதி மணலில் சுடுகாடு இருக்கிறது.)

வரப்பு உயர்ந்தால் நெல் உயரும்; நெல் உயர்ந்தால் சொல் உயரும்.