பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தமிழ்ப் பழமொழிகள்


வருகிற போது எல்லாம் வலிய வரும்; வந்தபின் போகிறது பேசது எல்லாம் போம்.

வருகிறவன் எப்போதும் வருவான் 19695


வருகிற விதி வந்தால் வளைந்தாடும் பானை.

வருத்தம் அறியாத மன்னனைச் சேவிக்கிறேன்.

வருத்தம் இல்லாமல் லாபம் இல்லை.

வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று.

(பழமொழி நானுாறு.)

வருந்தி அழைத்தால் வராதது இல்லை. 19700


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா,

வருந்தி வருந்திப் பார்த்தாலும் வருகிற போதுதான் வரும்.

வருந்தினால் திருந்தும்.

வகுந்தினால் வராதது ஒன்றும் இல்லை.

வரும் காரியம் சொல்லும் கெளளி வலியக் கழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல. 19705

(வரும் காலம்.)


வரும் சொல் வாயிலே.

வரும் போதே காதில் வாருகோல் குச்சி போட்டு வந்தான்.

வரும் விதி எங்கு இருந்தாலும் வரும்,

வரும் விதி தலையைக் காக்காது.

வரும் விதி வந்தால் படுவது பட வேண்டும். 19710

(படும் விதி.)


வரும் விதி வந்தால் வளைந்தாடும் பானையும்.

வரும் வினை வழியில் நிற்காது.

(வரும் விதி வழியில் தங்காது.)

வருமுன் காப்பான் சொன்ன புத்தியை வந்தபின் காப்பான் தள்ளினது போல.

வருவது சொன்னேன்! படுவது படு.

(வருவதை.)

வருவது தெய்வத்தால்; கெடுவது கர்வத்தால். 19715


வருவது வந்தது என்றால் படுவது படவேண்டும்.

வருவது வந்தே தீரும்.

வருவது வழியிலே தங்காது.

(நிற்காது.)