பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

125



வருவான் குருடன்; விழுவான் கிணற்றிலே.

வருஷம் நூறு ஆனாலும் ஆனைகறுவும். 19720


வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி.

(மகளே.)

வல்லடி வாரிக்கொண்டு போக.

வல்லவன் ஆட்டின பம்பரம் மணலிலும் ஆடும்.

(எரிந்த பம்பரம் மண்ணிலும் ஆடும்.)

வல்லவன் ஆடின பம்பரம் போல.

வல்லவன் போனது வழி. 19725


வல்லவன் போனதே வாய்க்கல்.

(தாயுமானார்.)

வல்லவனுக்கு எல்லாம் உண்டு.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்:

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்.

(உண்டு)

வல்லவனையும் வழுக்கும் பாறை. 19730


வல்லார் இளைத்தால் வந்து இளைப்பாறும் என்று சொல்லாது இரார்கள் சுத்தவீரர்கள்.

(சொல்லாதவர்களா சுத்த வீரர்களா?)

வல்லாள் கொல்லை வாழைப் பழம் ஆகும்.

வல்லாள கண்டியை வா என்றால் வருவாள், போ என்றால் போவாளா?

வல்லாளன் சொன்னதே வழக்கு.

வல்லான் வகுத்ததே வாய்க்கால். 19735

(தாயுமானவர்.)


வல்லான் வகுத்த வாய்க்கால் வடிக்கே பாயும்; தெற்கேயும் பாயும்.

வல்விலைக் கூறையும் மெல்விலைக் காளையும் ஆகா.

வலக்காலை முன் வைத்து வாழ வந்த நாள் முதலாய்.

வலது கை செய்வது இடது கை அறியாது செய்.

வலிமைக்கு வழக்கு இல்லை. 19740 வலிய உறவாடி வாசலிலே வந்தாலும் பொய் உறவாடிப் போய் வா என்று சொல்கிறான்.

வலியச் சண்டைக்குப் போகாதே; வந்த சண்டையை விடாதே,

கலுத்தால் கரும்பு, இளைத்தால் இரும்பு.