பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

127



வளர்த்த கடா மார்பிற் பாய்ந்தது போல்.

(கையில்.)

வளர்த்த நாய் முகத்தில் கடித்தாற் போல்.

வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது போல.

வளர்த்த பிள்ளை சோறு போடா விட்டாலும் வைத்த பிள்ளை சோறு போடும்.

(வைத்தபிள்ளை-தென்னம்பிள்ளை)

வளர்த்து வாழ்க்கைப் படுகிறது. 19775

(வளர்த்தி)


வளர்த்து விட்ட மரத்தைத் தறித்து விட்டாற் போல்,

வளர்ந்த உயரத்தை வாசற்படியிலே காட்டுகிறதா?

வளர்ப்பு வக்கனை அறியாது.

வளரும் காய் பிஞ்சிலே தெரியும்; விளையும் பயிர் முளையிலே தெரியும்.

வளரும் குழந்தை மழுப்போலே. 19780


வளவன் ஆயினும் அளவறிந்து உண்.

(அளவறிந்து அழித்து உண்.)

வளைத்துப் போனாலும் வழியிலே போது வேண்டும்.

வளைந்த மூங்கில் அரசன் முடிமேல்; வளையாத மூங்கில் கழைக் கூத்காடி காலின் கீழ்.

வற்றலாய்க் காய்ந்த வடகம் போல் வற்றி.

வற்றி இருக்கிற ஏரியைக் கண்டால் வளைய வளைய நீந்துவேன் என்ற கதை. 19785


வற்றிய ஓலை கலகலக்கும்.

வற்றிற்றாம் கள்; வறண்டாளாம் சாணாத்தி; ஊறிற்றாம் கள்; உதித்தாளாம் சாணாத்தி.

வறட்டுக் கத்தக் கத்துகிறான்.

வறட்டுத் தவளை கத்துகிற மாதிரி.

வறட்டுத் தவளையைப் போல் வாள் வாள் என்கிறது. 19790


வறட்டு மாடு ஆனாலும் ஒரு பீர் பால் கொடுக்காதா?

(ஒரு சேர்.)

வறட்டு ஜம்பத்துக்கு வாய் என்ன?

வறப் போக்கி முண்டலாமா, நாலு மாவு போட்டுக் கிண்டலாமா?

வறியார் இருமையும் அறியார்.

வறியார்க்கு அழகு வறுமையிற் செம்மை. 19795