பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

131


வாத்தியார் பெண்சாதி, மூத்தவள் பத்தினி.

வாத்தியார் பெண்டாட்டிக்கு வாடல் வெற்றிலைதான்.

வாத்தியார் பெண் பெரியவள். ஆனால் எனக்கு ஆச்சா? என் தம்பிக்கு ஆச்சா?

வாத்தியார் மெச்சின சிஷ்யன் இல்லை. 19860


வாத்தியார் மெச்சின பிள்ளையும் இல்லை; மாமியார் மெச்சிய மருமகளும் இல்லை.

வாத்தியாருக்கு என்ன வரும்? வரப் போகப் பேச்சு வரும்; காத்திருப்பதே கடன்.

வாத்தியாருக்கு நாய் இல்லை; வைத்தியனுக்குச் சொர்க்கம் இல்லை.

வாத்தியாருக்குப் பணம் வருகிறது; பள்ளிப் பிள்ளைக்குக் குசு வருகிறது.

வாத்தியாருக்குப் பணம் வருகிறது; பிள்ளைக்கு அடி வருகிறது. 19865


வாத்தியாரே, பிள்ளைக்கு என்ன வரும்? மாதம் எனக்கு இரண்டு பணம் வரும்.

வாத்தியாரே, வாத்தியாரே, என் பெண் திரண்டால் என்றால், எனக்கு என்ன ஆச்சு? என் பிள்ளைக்கு என்ன ஆச்சு என்றாராம்

வாத்தியாரைக் குறைக் கேழ் வரகும் விதைக்க வரச் சொன்னது போல.

(அரைக்கவர.)

வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை.

(+மாமியாரை மெச்சின மருமகளும் இல்லை.)

வாத்தியும் கூத்தியும் ஆறு மாசம். 19870


வாதத்து இயல்பு எடேல்.

(இடேல்.)

வாதத்துக்கு மருந்து உண்டு; பிடிவாதத்துக்கு மருந்து இல்லை.

வாத துர்ப்பலமே ஒழியச் சமய துர்ப்பலம் இல்லை.

வாதம் ஊதி அறி; வேதம் ஓதி அறி.

வாதம் கெட்டால் வைத்தியம். 19875


வாதம் கெடுத்தது பாதி; வண்ணான் கெடுத்தது பாதி.

வாதம் முற்றி வைத்தியன் ஆனாற் போல.

(வாதம் முற்றினால் வைத்தியன்.)