பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தமிழ்ப் பழமொழிகள்


வாதம் ரஸ வாதம்.

வாதராயண சம்பந்தம்.

வாதி கண்ணுக்கு மட்டம் எட்டு மாற்று. 19880


வாதிகள் கூட்டம் வங்கத்தைக் கண்டால் ஓட்டம்.

('வங்கம் கலத்தால் ரஸ வாதம் கெடும்.)

வாதி கெட்டால் வைத்தியன்.

(முற்றினால்.)

வாதி மகன் வைத்தியன் ஆவான்.

வாதுக்கு ஆடின கூத்தாடி வயசு சென்றால் கழுதை.

வாதுக்கு ஆடின தேவடியாள் வயசு சென்றால் கழுதை மேய்ப்பான். 19885


(கழுதை ஆவான். ஆடின தொப்பை, ஆவான்)

வாதுக்குக் கம்பு இடிக்கக் குதிர்க்கம்பு சேதம்,

வாது பாடி வண்ணம் பாடு.

வாது முற்கூறேல்

வாந்தி எடுத்ததைத் திரும்பிச் சாப்பிடலாமா?

வாப்பா, வாப்பா, தொப்பியைப் பிடி, கிணற்றில் விழ, 19890


வாப்பாவும் மாமரமும் ஓடையும் வந்தால் மாலுமி சாஸ்திரம் சொல்லுகிறான்.

வாய் அறியாது தின்றால் வயிறு அறியாது கழியும்.

வாய் இருந்தால் எங்கள் அம்மா வாழச் சொன்னாள்; இல்லா விட்டால் வந்து விடச் சொன்னாள்.

வாய் இருந்தால் மகளே, வாழலாம்.

(வாழ்ந்து வருவாய்.)

வாய் இருந்தால் வங்காளத்துக்கும் போகலாம். 19895


வாய் இரும்பு, கை இரும்பு.

வாய் இல்லாதவன் கழுவிலே இருப்பான்.

வாய் இல்லா விட்டால் நாய் கூடச் சட்டை செய்யாது.

(சீண்டாது.)

வாய் இல்லா விட்டால் நாய் கொண்டு போய்விடும்.

வாய் இல்லா விட்டால் பிறந்த வீட்டிலேயே நாய் தூக்கிக் கொண்டு போயிருக்கும். 19900


வாய் இல்லா விட்டால் பொட்டை நாய் கொண்டு போய்விடும்.

வாய் உண்டானால் பிள்ளை பிழைக்கும்.

(உள்ள பிள்ளை.)