பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தமிழ்ப் பழமொழிகள்

வான் குருவியின் வயிற்றெரிச்சல் வழி வழி விடாது.

வான் குருவி வாழ்வு பெற்றால் வையகம் செழிக்கும்.

வான் செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?

(உதவிக்கு.)

வான் செய்யும் கொடுமைக்கு வையகம் என் செய்யும்?

வான அம்புலி வா என்றால் வருமா? 20185


வானக் கறுப்போ, ஆனைக் கறுப்போ?

வானத்தில் உள்ள அம்புலியை வா என்றால் வருமா?

வானத்தின் கீழ் இருந்து இடிக்கு ஒளிக்கிறதா?

வானத்தின் கீழ் இருந்து மழைக்கு அஞ்சினால் தீருமா?

வானத்துப் புறாவை நம்பி கைப் புறாவை இழந்தது போல. 20140


வானத்தை வில்லாய் வளைப்பான்; மணலைக் கயிறாய்த் திரிப்பான்.

வானம் இழந்து தலைமேல் விழுந்தது போல்.

வானம் இருக்க மழை போமா?

வானம் ஈன்றது; பூமி தாங்கிற்று.

வானம் கருக்கப் பிசானம் கருக்கும். 20145


வானம் சுரக்கத் தானம் சுரக்கும்.

(சிறக்கும்.)

வானம் சுருங்கின் குணம் சுருங்கும்

வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.

வானம் பார்க்கப் போயும் இடம் இடைஞ்சலா?

(இடு முடுக்கா?)

வானம் பொத்தல் என்று சிற்றெறும்புத் தோலால் அடைந்தான். 20150


வானம் பொழிய வேண்டும்; பூமி தழைக்க வேண்டும்.

வானம் வழங்க தானம் வழங்கும்.

வானமும் பூமியும் கொள்ள தான் மரத்திலும் கல்லிலும் இருப்பானா?