பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தமிழ்ப் பழமொழிகள்



விண் விடும் குடிக்கு விண் விடும்; என் பாவி குடிக்கு விண் விடுமா?

வித்தாரக் கள்ளி விறகு ஒடிக்கப் போனாளாம்; கற்றாழை முன் கொத்தோடே தைத்ததாம். 20225

(கத்தாரி முன்.)


வித்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்.

வித்தியா சாலை விநோத சாலை.

வித்து இருக்கும் இடத்தில் வேர் இருக்க வேண்டும்.

வித்து இல்லாத சம்பிரதாயம், மேலும் இல்லை; கீழும் இல்லை.

வித்து இல்லாமல் மரம் இல்லை; மரம் இல்லாமல் வித்தும் இல்லை. 20230


வித்து இல்லாமல் முளை உண்டாகுமா?

வித்து இன்றிச் சம்பிரதம் இல்.

(பழமொழி நானூறு.)

வித்துக்கு விட்ட சுரைக்காய்போல.

வித்துப் பலம் பத்துப் பலம்.

வித்துவான் அருமையை விறகு தலையன் அறிவானா? 20235


வித்துவான் அருமையை வித்துவான் அறிய வேண்டுமே.

அல்லாமல் விறகு விற்கிறவனா அறியப் போகிறான்?

வித்துவான் கத்துவான்.

வித்துவான்களுக்கு எது பெரிது?

வித்துவான் தனவான். 20240


வித்துவானுக்கு ஏது பரதேசம்?

(வேற்று நாடு ஏது?)

வித்துவானும் மதயானையும் சரி.

வித்துவானை அடித்தவனும் இல்லை; பெற்ற தாயுடன் போனவனும் இல்லை.

வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.

(அழிக்கிற)

வித்தை அடித்தான் தட்டான்; பொன்னிறம் ஆச்சுது கொக்கு. 20245


வித்தை அடித்தே செத்த பாம்பு ஆடுது.

வித்தை அடி மாமி, கொத்துதடி கோழி.

வித்தை அடி மாமி, விற்கிறதடி பணியாரம்.