பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தமிழ்ப் பழமொழிகள்


விரித்து உடுத்தினால் அழுக்குப் படும்.
விரித்த உலகில் தெரிந்தவர் சிலர்.
விரியன் புரளுகிறது போல.

20330

விருத்தாசலம் போனால் திரட் பாவம் போகும்.
விருத்தர நாரீ பதிவ்ரதா.
விருதுக்காகவா வேட்டை ஆடுகிறது?
விருதுகூறி வந்து செடியிலே நுழைகிறது போல.
விருதுப்பட்டிக்குப் போன சனியனை வீட்டுக்கும் வந்து விட்டுப்
போ என்றானாம்.

20335

விருதுபட்டிச் சனியனை விலைக்கு வாங்கினது போல.
விருந்து இட்டுப் பகையை விளைக்கிறது .
(இட்டா - பகைமையை.)
விருந்து இல்லாச் சோறு மருந்தோடு ஒக்கும்.
விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
விருந்துக்காகவா வேட்டை ஆடுவது?

20340

விருந்துக்கு அழைத்து விஷத்தைக் கொடுத்தது போல.
விடுத்துக்கு நான்; பரியப் பணம் அண்ணளைக் கேள்.
விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
(வேனை, பொழுது.)
விருந்தைப் பண்ணிற் பொருந்தப் பண்ணு.
விருப்பத்தினால் ஆகாதது விம்பினால் ஆகுமா?

20345

விரும்பினால் வேம்பும் கரும்பு ஆகும்.
விருஷ்டியில் விதை மேல்,
விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா
(விதை .)
விரைக்கு விட்ட காய் போல.
{விதைக்கு.)
விரைக் கோட்டையில் எலியை வைத்துக் கட்டினது போல
(விதைக் கோட்டையில் பெருச்சாளி புகுந்தாற் போல.)

20350

விரை முந்தியோ மரம் முந்தியோ?
{விதை .)
விரைவில் கருமம் சிதையும் இடராய் விடும்.
(பழமொழி நானூறு.)
வில் அடியால் சாகாதது, கல் அடியால் சரகுமா?
வில் அம்பை விடச் சொல் அம்பு கொடியது.
வில் அம்போ, சொல் அம்போ?

20355