பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

155



விறகுதலையனுக்கு நோய் வந்தால் விறகுக் கட்டோட போய் விடும்.

வினைக் காலம் வரும் காலம் மனைவழியும் தெரியாது.

வினை கெட்ட அம்பட்டன் பூனையைச் சிரைத்தானாம். 20460


வினை கெட்ட பூதி திளை குத்தப் போனாளாம்.

(யாழ்ப்பாண வழக்கு.)

வினைதீர்த்தான் கோயில் விளக்கு அழகு.

வினைதீர்த்தான் கோயிலுக்குப் போயும் வினை தீரவில்லையா?

வினைப் பயனை விலக்க முடியுமா?

வினைப் பயனை வென்றாலும் விதிப்பயனை வெல்லல் ஆகாது. 20465


வினையை விலை கொடுத்து வாங்கினானாம்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

வினை வெந்து போகிறது.

விஷ்ணு பெரியவர் என்பது ஶ்ரீரங்கத்தில் பார்க்க வேண்டும்.

விஷ்ணுவே சமஸ்தம் என்பார் சிலர்; சிவனே பெரியவன் என்பார் சிலர். 20470 }


விஷ்ணுவைப் பெரியவன் என்பார் சீரங்கத்தில்; சிவனைப் பெரியவன் என்பார் அருணாசலத்தில்.

விஷ கடி வேளை.

விஷத்தின்மேல் விஷம், விஷம் போக்கும்.

(விஷத்துக்கு விஷம். )

விஷத்துக்கு மாற்று விஷம்.

விஷத்தைக் குடிக்கப் பால் ஆகுமா? 20475


விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.

விஷப் பரீட்சை பண்ணலாமா?

விஷம் என்றால் தலைக்கு ஏறுமா? தீ என்றால் வாய் சுடுமா?

விஷம் குடித்தாலும் சர்க்கசரி விசுவசிகன்.

விஷம் தின்றால் கொல்லும். 20480


விஷம், தீர வைத்தியன் வேண்டும்; பாவம் தீரத் தெய்வம் வேண்டும்.

விஷம் போல் ஏறுகிறது.

விஸ்தாரம் இருந்தால்தானே நீட்டிப் படுக்கலாம்?