பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156


வீ

வீக்கம் கண்டால் தூக்கமாம்

வீக்கமோ, தூக்கமோ? 20485


வீங்கலுக்கு விஷமம் அதிகம்.

வீங்கலுக்கு வீரியம் அதிகம்.

வீச்சு என்றாலும் விடுவேனோ.

வீரபுத்திர அம்பலகாரா? வீசம் இறுத்த குடி நாசம்.

(கொண்ட)

வீசி நடந்தால் வீசம் எடை. 20490


வீசி நடந்தால் வெள்ளி வீசம் குறையும்.

வீட்டில் அடங்காதவன் ஊரில் அடங்குவான்.

வீட்டில் அழகு வேம்பு அடி ஆகும்.

வீட்டில் இருக்கிற சாமியைப் போகச் சொல்லி விட்டுக் காட்டில் இருக்கிற சாமியை வரவழைத்தாளாம்.

வீட்டில் இருக்கிறது வெறும் சோகை; விருந்தாளி வந்தது காமாலைச் சோகை. 20495


வீட்டில் இருக்கிற பூனையை அடித்தால் மேட்டில் இருக்கிற எலியைப் பிடிக்கும்.

(மோட்டில்.)

வீட்டில் இருந்தால் காட்டிலும் உண்டு.

வீட்டில் வினை இருக்கிறது; வினைதீர்த்தான் கோயிலுக்குப் போனால் தீருமா?

வீட்டின் செழிப்புக் காட்டில் தெரியும்.

வீட்டு அடிக்கு வேம்பு அடி மேல். 20500


வீட்டு அழகு வாசற்காலைப் பார்த்தால் தெரியும்.

வீட்டு இளக்காரம் வண்ணான் அறிவான்.

வீட்டு எலியை அடித்தால் மோட்டு எலி பறக்கும்.

வீட்டுக் கருமம் நாட்டுக்கு உரையேல்.

வீட்டுக் கழுதை ஊராருக்குச் சுமக்குது. 20505