பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழ்ப் பழமொழிகள்




பெற்றது வயிற்றுப் பிள்ளை; கொண்டது கயிற்றுப் பிள்ளை.

பெற்ற பிள்ளை உதவுவதற்குமுகி வைத்த பிள்ளை உதவும். 17195

(வைத்த பிள்ளை.தென்னம் பின்ளை.)


பெற்ற பிள்ளை சோறு போட விட்டாலும் வைத்த பிள்ளை சேன்று போடும்.

பெற்ற பிள்ளை துடையிற் பேண்டால் என்ன செய்யலாம்?

பெற்ற பிள்ளையும் சரி, செத்த நாயும் சரி.

பெற்ற மனம் பித்து; பின்னை மனம் கல்லு.

பெற்ற வயிற்றுக்குப் பிரண்டையைக் கட்டிக் கொள்ள வேண்டும். 17200


பெற்றவள் அறிவாள் பிள்ளை வருத்தம்.

பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள்; பெண் சாதி மடியைப் பார்ப்பாள்.

பெற்றவருக்குத் தெரியாத பேர் இட?

பெற்றவருக்குத் தெரியும் பிரசவ வேதனை.

பெற்றவருக்குத் தெரியும் பிள்ளை அருமை, 17205


பெற்ற வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பேர்.

(வளர்ந்த விட்டுக்கும்.)

பெற்றாயோ, பிழைத்தாயோ?

பெற்றாரை நினையாத தறிதலை.

பெற்றாலும் பிள்ளை நாயகம்; நட்டாலும் தில்லைநாயகம்.

பெற்றாள் ஒருத்தி; பெருமை கொண்டாள் மற்றொருத்தி. 17210


பெற்றுப் பிழைத்தாயோ? செத்துப் பிழைத்தாயோ?

பெற்றுப் பெற்றுப் பேர் இட்டது போல்.

பெற்றுப் பேர் இடாவிட்டாலும் இட்டுப் பேர் இடு.

பெற்று வைத்த பிள்ளையும் கொடுத்து வைத்த பணமும் எங்கேயும் போகா.

பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும். 17215


பெறப் பெறப் பிள்ளை ஆசை.